கேரள கிறிஸ்தவர்களிடையே பிளவு... பிரதமர் மோடி தலையிடுவதாக மிசோரம் ஆளுநர் ஶ்ரீதரன்பிள்ளை தகவல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்தோடக்ஸ் மற்றும் ஜாக்கோபைட் கிறிஸ்தவ பிரிவினரிடையே நீடித்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கேரளாவை சேர்ந்த மிசோரம் ஆளுநர் ஶ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மலங்கரா சிரியன் சர்ச்சானது ஆர்த்தோடக்ஸ், ஜாக்கோபைட் என இரு பிரிவுகளாக நிற்கின்றன. இந்த மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

2017-ம் ஆண்டு இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றமானது, ஜாக்கோபைட் கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயங்களை ஆர்த்தோடக்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இதற்கு எதிராக ஜாக்கோபைட் பிரிவினர் போராட்டம் நடத்தினர். இது கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்தது.
இந்த பிரிவினரிடையே சமாதானம் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் இந்த முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் கேரளாவில் இந்த இருபிரிவினரிடையேயான மோதல் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மிசோரம் ஆளுநர் பிஎஸ் ஶ்ரீதரன் பிள்ளை, கேரளா கிறிஸ்தவர்களிடையேயான இந்த பிரச்சனை குறித்து பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவித்திருக்கிறோம். இதனை தொடர்ந்து இருதரப்பினரும் முதலில் ஆலோசனை நடத்துவர். இதன் பின்னர் இருபிரிவினருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications