நாளை திருவனந்தபுரம்- காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில் தொடக்கம்! இன்று கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு இரு நாட்கள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்துள்ளார். அவருக்கு கொலை மிரட்டல் எதிரொலியால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாகப் பிரதமர் மோடி வந்தார். அவர் இன்று மாலை மத்தியப் பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் சாலை பிரச்சாரத்தில் அவர் தொண்டர்களைச் சந்திக்கிறார்.

இதையடுத்து பாஜக இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் கிறிஸ்துவ மத தலைவர்களை சந்தித்தும் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு கொச்சியில் உள்ள தாஜ் மலபார் ஹோட்டலில் தங்குகிறார்.

Pm Narendra Modi to arrive Cochin today to flag off Vande Bharat tomorrow

நாளை செவ்வாய்க்கிழமை காலையில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். கேரளாவில் முதல்முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் அதுவும் சென்னை பெரம்பூர் லோகோ பேக்கடரியில் தயாரிக்கப்படுகிறது. இது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்ல கூடியது.

பிரதமர் மோடி பயணத்தின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் கடிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா பாஜக அலுவலகத்திற்கு வந்தது. மேலும் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய 49 பக்கமும் சமூகவலைதளங்களில் கசிந்த சம்பவமும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மற்றும் அவருடைய பாதுகாப்பு விவரங்கள் கசிந்ததை அடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே மோடி நிகழ்ச்சி நடைபெறும் கொச்சியில் 2 ஆயிரம் போலீஸாரும் திருவனந்தபுரத்தில் 2 ஆயிரம் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

Pm Narendra Modi to arrive Cochin today to flag off Vande Bharat tomorrow

மேலும் நிகழ்ச்சி நடக்கும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் ஸ்டேடியம் உள்ளிட்டவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வந்தே பாரத் சேவை தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரயில்கள் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை தராது. இந்த ரயில்கள் கொச்சுவேலி, நெய்யாற்றின்கரை, நேமம், கழக்கூட்டம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+