சோனியா பிரசவத்தின்போது நான் இருந்தேன்.. ராகுல் டெல்லியில்தான் பிறந்தார்.. கேரள நர்ஸ் பரபர பேட்டி
திருவனந்தபுரம்: ராகுல்காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நானே சாட்சி என்று கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
ராகுல் எந்த நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த எம்.பி சுப்பிரமணியன் சுவாமி இந்த சர்ச்சையை எழுப்பியிருந்தார். இது குறித்து அவர் மத்திய அரசின் உள்துறைக்கு எழுதியிருந்த கடிதத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் என்ற நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003-ம் ஆண்டிலிருந்து அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், செயலாளராவும் இருந்து வருகிறார்.

கடந்த 2005 அக்டோபர் 10 மற்றும் 2006 அக்டோபர் 31-ம் தேதி ஆண்டு வருமான வரிக்கான ரிட்டர்ன் தாக்கல் செய்தபோது, தன்னுடைய பிறந்தநாள் 1970, ஜூன் 19 என்று குறிப்பிட்டிருந்தார். தன்னை இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டிருந்தார். என சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை உள்துறை அமைச்சகம் ஏற்றுகொண்டதோடு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுலுக்கு நோட்டீசும் அனுப்பியது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தகவல்களை அறிந்த கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள சுல்தான் பத்தேரி, கல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜம்மா வவாதில் என்பவர் ராகுல் பிறந்தது இந்தியாவில்தான் என்பதற்கு நானே சாட்சி என்று கூறியுள்ளார். ஓய்வு பெற்ற செவிலியரான ராஜம்மா வவாதில் டெல்லி ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி முடித்து பின்னர் ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார், தற்போது அவருக்கு வயது 72.
சோனியா காந்திக்கு பிறந்த ஆண் குழந்தையை நானும் கையில் ஏந்தினேன். நான் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன். அப்போது ராகுல் மிகவும் அழகாக இருந்தார். ராகுல் இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நானே சாட்சி. அவர் இப்போது வயநாட்டில் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சோனியா காந்தியை பிரசவத்திற்காக அழைத்து சென்றபோது ராகுலின் தந்தை ராஜிவ்காந்தி, சஞ்சய் காந்தி, ஆகியோர் மருத்துவமனையில் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
ஆனால் இப்போது சுப்பிரமணியன் சுவாமி ராகுலின் குடியுரிமை குறித்து புகார் எழுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தியின் குடியுரிமை அடையாளத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவரின் குடியுரிமை குறித்த சுப்பிரமணியன் சுவாமியின் புகார் ஆதாரமற்றது. ராகுல் காந்தி டெல்லியில் பிறந்தார் என்பதற்கான அனைத்து சான்றுகளும் மருத்துவமனையில் இருக்கும். என்று ராஜம்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த சந்தர் பிரகாஷ் தியாகி, ஜெய் பகவான் கோயல், ஆகியோர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரை தேர்தலில் இருந்து போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications