Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Summer Bumper: தமிழருக்கு அடித்ததா ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு வென்றது யார்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.10 கோடி பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. பாலக்காடு தமிழக எல்லையோர மாவட்டம் என்பதால், தமிழகத்தில் இருந்து வந்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு யாருக்கேனும் அடித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பரிசு தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் விழுந்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கேரள சேட்டன்களுக்கு ஏற்படுள்ளது.

கேரளா லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று (28) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மொத்தம் 42 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அனைத்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட்டன. அதாவது 41 லட்சத்திற்கும் மேல் விற்றுள்ளன.

Summer Bumper

ரூ.10 கோடி முதல் பரிசு

அனல் பறக்கும் தேர்தல் களம், வெயிலுக்கு நடுவே டிக்கெட் விற்பனையும் இந்த முறை சூடுபறந்துள்ளது. முதல் பரிசு ரூ.10 கோடி என்பதால் இந்த டிக்கெட் வாங்க கேரள லாட்டரி பிரியர்களுக்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டது. முதல் பரிசு விழுந்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் எனக்கருதி பெரும் ஆர்வத்துடன் லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்கினார்.

லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த முதல் பரிசு SB 517026 (PALAKKAD) என்ற எண்ணிற்கு அடித்தது. பாலக்காட்டில் உள்ள மதுசூதனன் என்ற ஏஜென்சி விற்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. அதிர்ஷடசாலி யாரென்ற விவரம் இன்னும் தெரியவில்லை. பாலக்காட்டை பொறுத்தவரை தமிழகத்தின் எல்லையோர கேரள மாவட்டமாகும்.

தமிழருக்கு முதல் பரிசு அடித்ததா?

பாலக்காடு தினமும் ஆயிரக்கணக்கான தமிழகர்கள் பல்வேறு காரனங்களுக்காக சென்று வருகிறார்கள். மருத்துவம், கல்வி, தொழில் காரணங்களுக்காக பலரும் சென்று வரும் நிலையில், ஒரு சில லாட்டரி பிரியர்கள் கேரளா செல்லும் போது லாட்டரிகளை வாங்குகிறார்கள். அவர்களில் சிலருக்கு பரிசும் அடிப்பதையும் பார்க்க முடிகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஓணம் பம்பரில் முதல் பரிசு திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு அடித்து இருந்தது. அவ்வப்போது வெளி மாநிலத்தவர்களுக்கும் முதல் பரிசு அடிப்பதால், சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசு தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் விழுந்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கேரள சேட்டன்களுக்கு ஏற்படுள்ளது. முதல் பரிசு வென்று கோடிகளை குவிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்ற ஆவலுடன் கேரள லாட்டரி பிரியர்கள் காத்திருக்கிறார்கள்.

கைக்கு எவ்வளவு கிடைக்கும்?

தற்போது வரை அதிர்ஷ்டசாலி தெரியாத நிலையில், இன்று விடுமுறை நாள் எனபதால் வரும் நாட்களில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பரிசு ரூ.10 கோடி என்றாலும் 30 சதவீதம் வரி மற்றும் கமிஷன் பிடித்தம் உள்ளிட்டவைகள் போக சுமார் ரூ.6.3 கோடியே பரிசாக கிடைக்கும்.

முதல் பரிசு வென்றவர்கள் 30 நாட்களுக்குள் அசல் டிக்கெட்டை சமர்பித்து பரிசுத்தொகையை உரிமை கோரலாம். அதிகபட்சம் 90 நாட்களுக்குள், தாமதத்திற்கான உரிய காரணங்களுடன் டிக்கெட்டை சமர்பிக்கலாம். அதன்பிறகு சமர்பித்து பரிசுத்தொகை உரிமை கோர முடியாது. கள்ளச்சந்தையில் வாங்கப்பட்ட டிக்கெட் என்றாலும் பரிசுத்தொகை வழங்கப்படாது.

எப்படி பரிசு வாங்க வேண்டும்?

வெளி மாநிலத்தவராக இருந்தால் அவர்கள் கேரளாவில் டிக்கெட் வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்பித்து பரிசுத்தொகையை உரிமை கோரலாம். சம்மர் பம்பரில் இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. SE 660573என்ற டிக்கெட்டிற்கு இரண்டாவது பரிசு விழுந்தது. இந்த டிக்கெட்டும் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூரில் (CHITTUR) விற்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது பரிசு என இரண்டுமே பாலக்காடு மாவட்டத்திலேயே விழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+