சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை.. இன்று மாலை முதல் முன்பதிவு தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்படும். சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படும். இது வழக்கமாக நடைபெறுவது.

Sabarimala darshan booking starts from today for Jan 8 to Jan 19

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பல்வேறு இடர்பாடுகளை கடந்து தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

வரும் 8-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+