ஐயப்பனை காண திரண்ட பக்தர்கள்..திணறுது சன்னிதானம்! சத்திரம் வழி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் செய்தி!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலை சன்னிதானத்தில் நெரிசல் அதிகரித்துள்ளதால் சத்திரம் வனப் பாதையை கடந்து செல்வதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாக பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டு சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகரஜோதி தரிசனம்:
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை காண அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவது வழக்கம்.
சபரிமலை:
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பக்தர்கள் வருகையால் சன்னிதானம் திணறி வரும் நிலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பக்தர்கள் குழுவாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சத்திரம், புல் மேடு, எரிமேலி, அழுத கடவு, வனப்பாதை வழியாக செல்கின்றனர்.
சபரிமலையில் நெரிசல்:
தற்போது சபரிமலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப இங்கு பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் ஆனது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சீசன் நிறைவடைய இருக்கும் நிலையில் சபரிமலை சன்னிதானத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்துள்ளது. இதனால் அப்பாச்சி மேடு பகுதியில் இருந்தே சன்னிதானம் வரை கடும் நெரிசல் இருக்கிறது. சுமார் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
சத்திரம் பாதை:
இந்த நிலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகள் சத்திரம் வனப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்றனர். அதன் அடிப்படையில் இன்று முதல் நேரக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
நேரம் மாற்றம்:
அதன்படி, காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். முன்பு இரண்டு மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு மணி நேரம் பக்தர்கள் அனுமதி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அழுதகடவு, முக்குழி வனப் பாதையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் அந்த நேரத்தில் என்ற மாற்றமும் இல்லை.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications