Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெய் மணக்குது நெய் இருக்குது சபரிமலையிலே! ஒளிரபோகும் மகரவிளக்கு! ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சனிக்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்நிலையில், மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், இருமுடி கட்டி சன்னிதானம் வந்த ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தால் சபரிமலையே நிரம்பியது. சரண கோஷத்துடன் 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூறியுள்ளது.

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை கடந்த சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது.

முன்னதாக மண்டல பூஜைக்காக பயன்படுத்தப்படும் தங்க அங்கி பந்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் இருந்து புறப்பட்டது. 23ஆம் தேதி தொடங்கிய தங்க அங்கி ஊர்வலம் பம்பை வழியாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தங்க அங்கி அணிந்து அருள் பாலித்த ஐயப்பனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Sabarimala Mandala Pooja Makaravilakku

சபரிமலையில் ஐயப்பன் கோவில்

தொடர்ந்து சனிக்கிழமை காலை 10.10 மணிக்கு தொடங்கிய மண்டல பூஜை 11:30 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு மண்டல கால வழிபாடுகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் சன்னிதானத்தை சுத்தம் செய்வதற்காக 28 மற்றும் 29ஆம் தேதிகளில் சன்னிதானம் நடை சாத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், சபரிமலையில் மகரஜோதி தரிசனம் வரும் ஜனவரிமாதம் 14ஆம் தேதி நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.

சபரிமலை மகர விளக்கு

தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்பட்டு ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை நெய்யாபிஷேகம் நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 256 பக்தர்கள் சன்னிதானம் வந்தனர். 30-ம் தேதி 57 ஆயிரத்து 256 பேர் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 5:00 மணி வரை 63 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை பக்தர்கள்

மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு தொடங்கிய நிலையில், முன்னதாக. 3:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் நடத்திய பின்னர் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கியது.நேற்று மதியம் மகர விளக்குகால முதல் களபாபிஷேகம் நடந்தது. மகர விளக்கு காலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக தனி அதிகாரியாக எஸ்.பி., எம்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளா நிலையி, 10 டிஎஸ்பிகள், 35 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் உட்பட 1593 போலீசார் சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகரஜோதி தரிசனம்

வரும் ஜனவரி 14ஆம் தேதி, மகரஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின்னர் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும் மகர நட்சத்திரமும் தெரியும். முன்னதாக புல்மேடு சம்பவம் எதிரொலியாக மகர ஜோதி நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் எனவும், மகர விளக்கு பூஜைக்கு முந்தைய நாளான ஜனவரி 13ஆம் தேதி 35 ஆயிரம் பக்தர்களுக்கும் மகர விளக்கு பூஜை நடைபெறும். ஜனவரி 14-ஆம் தேதி 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+