வெடித்து சிதறிய செல்போன்.. பலியான 8-வயது சிறுமி.. ரெட்மி நிறுவனம் கொடுத்த விளக்கத்தை பாருங்க
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ரெட்மி போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருந்த சிறுமி, செல்போன் வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ரெட்மி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
செல்போன் பயன்பாடு உலகம் முழுவதும் பெருகிவிட்டது. அதிலும் இந்தியாவில் இதைப்பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. வீட்டிற்கு ஒரு போன் இருப்பதே அரிதாக காணப்பட்ட காலம் மாறி இன்று ஆளுக்கு ஒரு செல்போன் என மாறிவிட்டது. அதிலும் ஸ்மார்ட் போன் வருகைக்கு பிறகு செல்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.
இன்னும் சொல்லப்போனால், செல்போனுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். வெறும் பேசுவதற்கு மட்டும் பயன்பட்ட செல்போன்கள், ஸமார்ட் போன்கள் வருகைக்கு பிறகு பணம் அனுப்புவதில் தொடங்கி, வாகனம் புக் செய்வது வரை மக்களின் அனைத்து தொழில் நுட்ப பயன்பாட்டிற்குமான கருவியாக மாறிப்போனது.

நேரம் போகவில்லை என்றால் வீடியோ கேம் விளையாடுவது,... வீடியோக்கள் பார்ப்பது என நேரத்தை செலவிடவும் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் குழந்தைகள் கூட செல்போனைக் கண்டால் தற்போது அழுகையை நிறுத்தி விடுகின்றன. இதனால் குழந்தையை சமாதானப்படுத்த பலரும் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன்களை கையில் கொடுத்து விளையாட விடுகின்றனர். இதனால் குழந்தைகளின் கவனமும் சிதற வாய்ப்புள்ளது.
இது ஒருபக்கம் என்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக செல்போன் வெடித்து சிதறியதில் 8-வயது சிறுமி உயிரிழந்த சோகமும் நடைபெற்றது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் திருவில்லா அருகே உள்ள பட்டிபரம்பு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் 8 வயது மகள் ஆதித்யா ஸ்ரீ . அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த ஆதித்யா ஸ்ரீ தனது தந்தை செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் தீக்காயம் அடைந்த சிறுமியை பெற்றோர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிசை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ஆதித்யா ஸ்ரீ உயிரிழந்தாள். செல்போன் வெடித்ததில் 8-வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிறுதி ஆதித்யா ஸ்ரீ, ரெட்மி நிறுவனத்தின் செல்போனை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து ரெட்மி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜியோமி தனது தரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. ஜியோமி நிறுவனம் கூறுகையில், " வாடிக்கையாளர்களின் பாதுகாப்புத்தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது போன்ற விவகாரங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வோம்.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். சாத்தியமான வழிகளில் அவர்களுக்கு உதவ முடியும் என நம்புகிறோம். வெடித்தது ரெட்மி போன் என்று சில தகவல்கள் வெளியாகின்றன. எனினும் இது உறுதியாகவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தின் உண்மை காரணம் குறித்து கண்டறிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம். தேவையான வகையில் அவர்களுக்கு ஆதரவு அளிபோம்" என்று தெரிவித்துள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications