Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் புகார் கூறியதால் உணவில் எனக்கு ஸ்லோ பாய்சன்.. பகீர் கிளப்பும் சரிதா நாயர்.. பரபரக்கும் கேரளா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்ததாகவும் உணவில் விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பதாகவும் சோலார் பேனல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் பகீர் தகவலை கிளப்பியுள்ளார்.

தமிழகம், கேரளாவில சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் மீது புகார் எழுந்தது.

உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இந்த முறைகேடு நடந்தது. இந்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இவர் அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டி மீது பாலியல் குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார்.

 ஜாமீன்

ஜாமீன்

இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சரிதா நாயர் கேரள அரசியல் பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நிலையில் சரியா நாயர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸிஸ் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இடது கண்ணில் பார்வை குறைபாடு உள்ளது.

முடி கொட்டுதல்

முடி கொட்டுதல்

எனது முடியும் அதிகமாக கொட்டி விட்டது. மேலும் உடலில் தோலில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது என்னை ரத்த பரிசோதனை எடுக்கச் சொன்னார்கள், அதில் அதிக அளவுக்கு ஆர்சனிக், பாதரசம், ஈயம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இந்த ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டது.

மெல்ல கொல்லும் விஷம்

மெல்ல கொல்லும் விஷம்

இவை என் உடலில் கலந்தால் நான் மெல்ல மெல்ல இறக்கும் நிலைக்கு சென்றுவிடுவேன். இதற்காகவே எனக்கு மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்துள்ளனர். நான் அடிக்கடி குடிக்கும் ஜூஸ், குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்களில் கலந்து கொடுத்துள்ளனர். இதை யார் கொடுத்தார்கள் என எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது தெரியவந்தது.

ஜூஸ் குடிக்க சென்றேன்

ஜூஸ் குடிக்க சென்றேன்

அண்மையில் நான் திருவனந்தபுரம் சென்றேன். அப்போது ஜூஸ் குடிக்க காரை நிறுத்த சொன்னேன், டிரைவர் வினுகுமாரிடம் வாங்கி வருமாறு சொன்னேன். அவர் ஜூஸை வாங்கி வந்து அதில் எதையோ கலந்ததை நான் பார்த்துவிட்டேன். ஆனால் அவரை நான் பணியிலிருந்து நீக்கிவிட்டேன். எனவே எனக்கு அவர் மீது சந்தேகம் உள்ளது. பிறகு அவரை நான் பணியிலிருந்து நீக்கிவிட்டேன்.

அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார்

அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார்

கடந்த 2018ஆம் ஆண்டு நான் அரசியல் பிரமுகர்கள் சிலர் மீது பாலியல் புகார் கொடுத்தேன். இதனால் என்னை கொல்ல திட்டமிட்டு வினுகுமார் மூலம் எனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தார்கள். 2018 ஆம் ஆண்டு முதல் எனக்கு நரம்பு பிரச்சினை ஏற்பட்டது. எனக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹீமோதெரபி கொடுக்கப்பட்டது. ஆயினும் எனது பிரச்சினை தீரவே இல்லை. இதனால் என்னை மருத்துவர்கள் உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார்கள். எனவே இதுகுறித்து வினுகுமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சரிதா நாயர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சோலார் பேனல் வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் நிலையில் அந்த வழக்கை திசைத்திருப்பும் கோணத்தில் சரிதா நாயர் ஸ்லோ பாய்சன் புகாரை கூறியுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+