சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில்.. துள்ளி குதிக்கும் சேட்டன்கள்.. மேட்டர் இதுதான்!
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. புதிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் சென்னை ஐசிஎப்பில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்ப்பதற்கு புல்லெட் ரயில் போன்ற வெளித்தோற்றம் கொண்ட இந்த ரயில் பல்வேறு வசதிகளையும் கொண்டது ஆகும். எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் கூடுதல் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில்கள் முழுவதுமாக ஏசி வசதி கொண்டது ஆகும்.

அது மட்டும் இன்றி வைஃபை வசதி, தானியங்கி கதவுகள், பெரிய ஜன்னல்கள், பயோ டாய்லட்டுகள் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலில் ரயில் பெட்டியுடன் சேர்ந்தே என்ஜின் இருக்கும். நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் இரண்டு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை- கோவை மற்றும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு என மொத்தம் 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் சென்னை - நெல்லை இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கேரளாவில் தற்போது ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காசர் கோடு - திருவனந்தபுரம் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவுக்கு மேலும் ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தான் பாலக்காடு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட ரயில், சென்னையில் இருந்து நேற்று இரவு 8.42 மணிக்கு மங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் இன்று மங்களூர் சென்று சேர்ந்துள்ளது. வந்தே பாரத் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்ட இந்த ரயில் இன்று மங்களுருவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது நடப்பு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மங்களூர் - திருவனந்தபுரம், மங்களூர் - எர்ணாகுளம், மங்களூர் - கோவை, மடேகான் (கோவை)- எர்ணாகுளம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு வழித்தடத்தில் இயக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications