சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில்.. துள்ளி குதிக்கும் சேட்டன்கள்.. மேட்டர் இதுதான்!
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. புதிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் சென்னை ஐசிஎப்பில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்ப்பதற்கு புல்லெட் ரயில் போன்ற வெளித்தோற்றம் கொண்ட இந்த ரயில் பல்வேறு வசதிகளையும் கொண்டது ஆகும். எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் கூடுதல் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில்கள் முழுவதுமாக ஏசி வசதி கொண்டது ஆகும்.

அது மட்டும் இன்றி வைஃபை வசதி, தானியங்கி கதவுகள், பெரிய ஜன்னல்கள், பயோ டாய்லட்டுகள் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலில் ரயில் பெட்டியுடன் சேர்ந்தே என்ஜின் இருக்கும். நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் இரண்டு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை- கோவை மற்றும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு என மொத்தம் 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் சென்னை - நெல்லை இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கேரளாவில் தற்போது ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காசர் கோடு - திருவனந்தபுரம் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவுக்கு மேலும் ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தான் பாலக்காடு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட ரயில், சென்னையில் இருந்து நேற்று இரவு 8.42 மணிக்கு மங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் இன்று மங்களூர் சென்று சேர்ந்துள்ளது. வந்தே பாரத் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்ட இந்த ரயில் இன்று மங்களுருவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது நடப்பு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மங்களூர் - திருவனந்தபுரம், மங்களூர் - எர்ணாகுளம், மங்களூர் - கோவை, மடேகான் (கோவை)- எர்ணாகுளம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு வழித்தடத்தில் இயக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications