சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில்.. துள்ளி குதிக்கும் சேட்டன்கள்.. மேட்டர் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. புதிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் சென்னை ஐசிஎப்பில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்ப்பதற்கு புல்லெட் ரயில் போன்ற வெளித்தோற்றம் கொண்ட இந்த ரயில் பல்வேறு வசதிகளையும் கொண்டது ஆகும். எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் கூடுதல் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில்கள் முழுவதுமாக ஏசி வசதி கொண்டது ஆகும்.

Second Vande Bharat likely for Kerala, Train Departs from Chennai ICF

அது மட்டும் இன்றி வைஃபை வசதி, தானியங்கி கதவுகள், பெரிய ஜன்னல்கள், பயோ டாய்லட்டுகள் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலில் ரயில் பெட்டியுடன் சேர்ந்தே என்ஜின் இருக்கும். நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் இரண்டு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை- கோவை மற்றும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு என மொத்தம் 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் சென்னை - நெல்லை இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கேரளாவில் தற்போது ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காசர் கோடு - திருவனந்தபுரம் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவுக்கு மேலும் ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தான் பாலக்காடு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட ரயில், சென்னையில் இருந்து நேற்று இரவு 8.42 மணிக்கு மங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் இன்று மங்களூர் சென்று சேர்ந்துள்ளது. வந்தே பாரத் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்ட இந்த ரயில் இன்று மங்களுருவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது நடப்பு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மங்களூர் - திருவனந்தபுரம், மங்களூர் - எர்ணாகுளம், மங்களூர் - கோவை, மடேகான் (கோவை)- எர்ணாகுளம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு வழித்தடத்தில் இயக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+