பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்!
இந்தி திணிப்பிற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்துள்ள டிவிட்டுகள் பெரிய வைரலாகி உள்ளது.
திருவனந்தபுரம்: இந்தி திணிப்பிற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்துள்ள டிவிட்டுகள் பெரிய வைரலாகி உள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஹிந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்து மக்கள் இடையே கடுமையான கோபத்தை வரவழைத்து இருக்கிறது. முக்கியமாக தென்னிந்திய மக்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளது.

கடுமை
இந்தியாவில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகமும், கர்நாடகாவும், வங்கமும் தீவிரமாக நடத்தி வருகிறது. தற்போது அந்த போராட்டத்தில் கேரளாவும் இணைந்துள்ளது. இந்த நிலையில் இந்தி திணிப்பிற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் டிவிட் செய்துள்ளார்.
|
என்ன செய்துள்ளார்
அவர் தனது டிவிட்டில், இந்தி இந்தியாவை ஒன்றிணைக்கும் என்று கூறுவதை விட பெரிய அபத்தம் கிடையாது. அந்த மொழி பல இந்தியர்களுக்கு தாய் மொழி கூட கிடையாது. அப்படிப்பட்ட மொழியை மக்கள் மீது திணிக்க நினைப்பது அவர்களை அடிமைப்படுத்துவதற்கு சமம். இந்தி பேசாத மக்களுக்கு எதிராக நடத்தப்படும் போர் முழுக்கம் இது.

இந்தியா
எந்த ஒரு இந்தியனும் மொழியை வைத்து அந்நியமாக நடத்தப்பட கூடாது. இந்தியாவின் பலமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். தன்னுடைய பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும். சூழ்ச்சிகளை மக்கள் பார்த்து உணர்ந்து கொள்வார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
|
என்ன உண்மை
மக்களை உண்மையான பிரச்சனையில் இருந்து திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது தெரியும், என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

கேரள மக்கள்
பினராயி விஜயனின் டிவிட்டை தொடர்ந்து மலையாளிகள் தற்போது இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். #StopHindiImposition டேக்கை நேற்று தமிழர்களும், கன்னட மக்களும் வைரலாக்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது மலையாளிகளும் இதில் வரிசையாக டிவிட் செய்ய தொடங்கி உள்ளனர்.
-
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications