Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை டூ திருச்சூர்.. யாருங்க இந்த "காஸ்ட்லி" நபர்.. டிரஸ்ஸுக்குள் பார்த்தால்.. வாயை பிளந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனியார் பஸ்ஸில் வந்த அந்த நபர் யார்? எந்த கட்சியை சேர்ந்தவர்? என்று இன்னும் முழுமையாக விவரம் தெரியவில்லை.. கேரள மாநில போலீசாரே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ந் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நிலையில், பிற மாநிலங்களிலும் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.

Were there secret rooms in the dress and Who is this Coimbatore to Thrissure Bus Passenger caught by the Kerala Police

விதிமுறைகள்: அந்தவகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் ரொக்கமாக 50000 பணத்திற்கு மேல் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டிருக்கிறது..

அதுபோலவே, மதுபாட்டிகளை பெட்டி பெட்டியாக எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தங்கத்தையும் மொத்தமாக எடுத்து செல்ல தடை அமலில் உள்ளது. பரிசு பொருட்கள், பண விநியோகத்தை தடுக்கவும் போலீசார் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.

கேரளா மாநிலத்தில் வரும் 26ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க போகிறது.. எனவே, தமிழக, கேரள எல்லையான வளையார் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

செக்போஸ்ட்: அந்தவகையில், கேரளா போலீசார் செக்போஸ்ட்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கோவையிலிருந்து திருச்சூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.. அப்போது, அந்த தனியார் பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தனர். அதிலிருந்த பயணிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு நபரின்மீது அதிகம் சந்தேகம் கொண்ட போலீசார், அவரை முழுமையாக பரிசோதித்தனர்.. அதிலும் அவர் உடுத்தியிருந்த ஆடை வித்தியாசமாக இருந்தது.

அந்த ஆடைகளில் பல்வேறு இடங்களில் நிறைய "ரகசிய அறைகள்" இருந்தன.. அவை ஒவ்வொன்றிலும், கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது..

அதிர்ந்த போலீஸ்: மொத்த பணத்தையும் வெளியே எடுக்குமாறு போலீசார் அந்த நபரிடம் சொன்னார்கள்.. அவரும் ஆடையிலில் பல இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை வெளியே எடுத்தார். அவர் ஒவ்வொரு இடமாக பணத்தை மறைத்து வைத்திருந்ததை பார்த்து போலீசாரே அதிர்ந்து போனார்கள். இந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவுமே இல்லை...

ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்தை ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.. சம்பந்தப்பட்ட 40 வயது நபர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பது தெரியவந்துள்ளது. தற்போது போலீசாரின் விசாரணையில் உள்ளார் வினோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+