Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேம்பி தேம்பி இரவெல்லாம் அழுது..ரேஷ்மாவின் புதுதாலி வாசம்கூட போலியே..நிஜமாவே அந்த "குரல்" யாருடையது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: போனில் அடிக்கடி கேட்கும் அந்த பெண் குரல் யாருடையது? என்ற மனஉளைச்சலுக்கு ஆளானார் ரேஷ்மா.. இதுகுறித்த சந்தேகம்தான், இப்படியொரு விபரீத முடிவை எடுக்க காரணமாகிவிட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது முள்ளில்லாவன்முடு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் ரேஷ்மா.. 23 வயதாகிறது.. இவருக்கு அருவிக்கரா பகுதியை சேர்ந்த அக்‌ஷய் ராஜ் என்பவரை பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

 Who is this Reshma and Why Did bride take this sudden decision within 30 days

கல்யாணம்: இரு வீட்டு பெற்றோர்களும் இணைந்து, மணமக்களின் சம்மதத்தை பெற்று, கடந்த மாதம் 12ம் தேதி இவர்களின் கல்யாணத்தை தடபுடலாக நடத்தி வைத்திருக்கிறார்கள்.

இதையடுத்து ரேஷ்மா தன்னுடைய கணவர் அக்ஷய் ராஜுடன், அருவிக்கராவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கையை துவக்கினர்.

 Who is this Reshma and Why Did bride take this sudden decision within 30 days

தற்கொலை: இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரேஷ்மா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. அவரது பெட்ரூமில் உள்ள ஃபேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அக்‌ஷயின் குடும்பத்தினர் அலறி துடித்தனர்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் விரைந்து வந்து, ஃபேனில் தொங்கிய நிலையில் கிடந்த ரேஷ்மாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

 Who is this Reshma and Why Did bride take this sudden decision within 30 days

பிறகு, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை கையில் எடுத்தனர். இதில், ரேஷ்மாவின் கணவர் அக்‌ஷய், வேறொரு பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசிவந்தாராம்.. அந்த பெண்ணிடமிருந்து போன் வந்தாலே, அக்‌ஷய்யின் பேச்சில் வித்தியாசம் தெரிவதை ரேஷ்மா கவனித்துள்ளார்.

யாரந்த குரல்: தொடர்ந்து கணவனுக்கு போன் வந்துகொண்டேயிருக்கவும், கணவருக்கு அந்த பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் ரேஷ்மா சந்தேகப்பட்டார். இந்த சந்தேகம், கடுமையான மன உளைச்சலில் கொண்டுபோய் ரேஷ்மாவை விட்டுவிட்டது.

 Who is this Reshma and Why Did bride take this sudden decision within 30 days

சம்பவத்தன்றுகூட, விடிய விடிய அழுது தீர்த்த ரேஷ்மா, விடிகாலை 3 மணிக்கு தற்கொலை செய்துள்ளார். இந்த நேரத்தில், அக்‌ஷய் வீட்டில் இல்லை என்கிறார்கள்.. மறுநாள் காலை பெட்ரூமைவிட்டு, ரேஷ்மா வெளியே வராத நிலையில், அக்‌ஷய் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோதுதான், சடலத்தை கண்டு அலறியுள்ளனர்.

அதிர்ச்சி: திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அக்‌ஷய்யுடன் போனில் பேசிய அந்த பெண் யார்? என்று உண்மையிலேயே தெரியவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+