கன்னியாகுமரி அருவிக்கு சுற்றுலா.. கேரள இளம் பெண்ணிடம் ஒரு நிமிட சலனம்.. ஜெயிலில் வங்கி ஊழியர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அருவிகளில் முக்கியமானது திற்பரப்பு அருவி.. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தினமும் சுற்றுலா வருவார்கள். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த பலர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் போது, அப்படியே திற்பரப்பு அருவிக்கும் வருவார்கள்.. அப்படி வந்து, திற்பரப்பு அருவியில் குளித்துக் கொண்டிருந்த கேரள பிளஸ்-2 மாணவிக்கு என்ன நடந்தது.. தனியார் வங்கி ஊழியரை போலீசார் ஏன் கைது செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. இது குமரிக் குற்றாலம் என்று கன்னியாகுமரி மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுகும். அருவி அமைந்துள்ள பகுதியில் குற்றலாத்திற்கு நிகரான கிளைமேட்டும் இருக்கிறது. இங்கு ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இந்த திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி காட்சிமுனைக்கு அடுத்தபடியாக பலரும் வந்து செல்லும் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

திற்பரப்பு அருவி சுற்றுலா
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அடிக்கடி வருகிறார்கள். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையொட்டி ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். அதேநேரம் அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான பகுதியில் மட்டும் குளிக்கிறார்கள்.
கேரள மாணவி
கடந்த அக்டோபர் 2ம் தேதி அன்று கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்புழா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தனது உறவினர்களுடன் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்துள்ளார். அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் அவர் பாதுகாப்பாக குளித்து கொண்டிருந்தார்.
சத்தம் போட்ட மாணவி
அப்போது அவரது அருகே குளித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர் திடீரென அந்த மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். மாணவியின் சத்தம் கேட்டு அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றவர்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் அந்த வாலிபரை அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி வங்கி ஊழியர்
போலீசார் அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த 32 வயதாகும் மாரிசெல்வம் என்பதும், அங்கு ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மாரிசெல்வம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திற்பரப்பு அருவியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications