அதிரவைத்த பெரம்பூர் நகைக்கடை கொள்ளை.. 4 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது! பரபர!
சென்னை: பெரம்பூர் நகைக்கடை ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கொள்ளையன் கௌதமை பெங்களூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி, ஷட்டரை துளையிட்டு, 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது.

கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிப்படை போலீஸார் முகாமிட்டு, தகவல்களை சேகரித்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில், 2 பேர் நகைகளைப் பங்கு பிரிப்பது தொடர்பாக மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கங்காதரன், ஸ்டீபன் என்பதும், பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்த இரண்டரை கிலோ நகைகள் குறித்து விசாரித்த போது, தங்கள் கூட்டாளிகளுடன் பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து தமிழ்நாடு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கர்நாடகாவில் முகாமிட்டிருந்த தமிழ்நாடு தனிப்படை போலீஸார், கங்காதரன், ஸ்டீபன் ஆகியோரது கூட்டாளிகள் கஜேந்திரன், திவாகர் ஆகியோரைக் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கங்காதரன், ஸ்டீபன், கஜேந்திரன், திவாகர், அருண், கவுதம் ஆகிய 6 பேர் சேர்ந்து, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கு கங்காதரன் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார். தொடர்ந்து அதிரடியாக தேடுதல் வேட்டை நடத்தி கஜேந்திரன், திவாகரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள அருண், கவுதம் ஆகியோரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
சில நாட்களில் அருணையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருணிடம் இருந்து முக்கால் கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. அருண், பெரம்பூர் பகுதியில் பழைய வாகனங்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததோடு, காவலாளி இல்லாத நேரம் பார்த்து நகைக்கடையை நோட்டமிட்டு, தனது கூட்டாளிகளுக்கு தகவல் சொல்லி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கங்காதரன், ஸ்டீபன், கஜேந்திரன், திவாகர், அருண் மற்றும் நகைகளை உருக்கிய கொள்ளையன் கங்காதரனின் மனைவி கீதா மற்றும் அவரது மைத்துனர் ராகவேந்திரா என 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 8வது முக்கிய குற்றவாளியான கௌதமை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
கௌதம் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த சூழலில், தனிப்படை போலீசார் பெங்களுரில் கைது செய்துள்ளனர். பெரம்பூர் நகைக் கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8வது நபராக கௌதம் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications