Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை வந்தாச்சு! மேகமலை போற பிளானா? சென்னையிலிருந்து பஸ்ஸில் எப்படி போகலாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மேகமலைக்கு சென்னையிலிருந்து பேருந்து வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ளது மேகமலை. பசுமையான இடம் என்பதால் இது ஒரு அழகிய சுற்றுலா தலமாகும். இங்கு தேயிலை தோட்டங்கள், காபி பயிர் தோட்டங்கள், ஆழமான பள்ளங்கள் உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

Do you know the bus facility from Chennai to Megamalai


இங்கு மலைச் சிகரங்களும் ஒரு பள்ளத்தாக்கும் உள்ளது. இது மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு தேயிலை தோட்டம் இருப்பதால் ஆங்கிலேயர்களால் தேயிலையை பறித்து பக்குவப்படுத்த தொழிற்சாலையும் உள்ளது.

நீர்மின்சக்தி: இந்த மலை பகுதியில் ஹைவேலிஸ் என்ற பகுதி உள்ளது. இந்த மலையில் வெண்ணியாறு, இரவங்கலூர், மகாராசாமெட்டு போன்ற பிற குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இந்த மலை பகுதியில் உள்ள சுருளியாறு பகுதியில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து நீர் மின்சக்தி எடுக்கும் சுருளியாறு நீர்மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மேகமலை என்ற பெயருக்கேற்ப மேகங்கள் தவழ்ந்து செல்லும் அற்புதமான இடம் இது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது வன உயிரின சரணாலயமாக விளங்குகிறது. இங்கு அரிதான ஹார்ன்பில், சலீம் அலி வவ்வால், ஹூட்டன் பிட் வைபர் பாம்பு உள்ளிட்ட பறவைகள் இங்கு உள்ளன. மேகமலைக்கு செல்ல மோசமாக இருந்த சாலை தற்போதுதான் 4 ஆண்டுகள் கழித்து சீராகி உள்ளது. இங்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

தேயிலை தூள்: ஹைவேவிஸ் அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு, தூவாணம் அணை, மணலாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் மீன்களை அங்கேயே சூடாக சமைத்து கொடுப்பார்கள். இங்கு தேயிலை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்.

ஹைவேவிஸ் அணையை தாண்டி சென்றால் இறைச்சல் பாறை இருக்கும். இங்கு தண்ணீர் வற்றாது. இது மருத்துவ குணம் கொண்டது. மேகமலையில் தேயிலை தோட்டம் இருப்பதால் யானைகள் அதிகமாக சுற்றி திரியும். யானை மட்டுமல்லாமல் காட்டு மாடுகளும் வரும். எனவே மேகங்களும் மறைத்துக் கொள்வதால் வாகனங்களை பார்த்து இயக்க வேண்டும்.

யானை கூட்டம்: வட்டப்பாறை பகுதியில் தினமும் காலை, மாலை யானைக் கூட்டத்தை பார்க்கலாம். யானைகள் மக்களோடு பழகியதால் அவை மனிதர்களை ஒன்று செய்யாது. ஆனால் மேகக் கூட்டங்களால் நாம் அவற்றின் மீது மோதிவிட்டால் விபரீதம் ஆகிவிடும். மேகமலையில் சுற்றுலா பயணிகள் தங்க தனியாக காட்டேஜ்கள் உள்ளன. பேரூராட்சியின் தங்கும் விடுதிகளும் உள்ளன.

மேகமலைக்கு எப்படி வர வேண்டும் தெரியுமா. சென்னையிலிருந்து தேனிக்கு பேருந்து மூலம் வர வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமன்னூரில் இருந்து காலை , மாலை இரு வேளையும் பேருந்து வசதிகள் உள்ளன. அங்கிருந்து 34 கி.மீ. தூரம் உள்ள மேகமலைக்கு செல்லலாம். மகாராசாமெட்டு என்ற பெயர் போடப்பட்டிருக்கும்.

பேருந்தில் எப்படி செல்லலாம்: பேருந்து மட்டுமல்லாமல் சொந்த வாகனங்களில் கூட மேகமலைக்கு நிறைய பேர் வருகிறார்கள். இங்கு வர காலை 6 மணிக்கு மேலும் மாலை 6 மணிக்குள்ளும் மட்டும்தான் அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு இருட்டிவிடும் என்பதால் இந்த வனத்துறைக்கு சொந்தமான சாலையில் செல்ல முடியாது. சென்னையிலிருந்து தேனி செல்ல 505 கி.மீ தூரம் உள்ளது. செல்லும் காலம்- 9 மணி நேரமாகும். கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் சீக்கிரமே மேகமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+