முதுமலையில் கர்நாடகா தம்பதி.. நொடிப்பொழுதில் ஆக்ரோஷமான யானை.. உறைந்த வாகன ஓட்டிகள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் இரவு நேரங்களில் செல்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் யானைகள் சர்வ சாதாரணமாக உலாவரும். இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு,
முதுமலையில் காட்டு யானை திடீரென விரட்டியதால் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தம்பதி தப்பி ஓடினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் இருக்கின்றன. இதனால் வனவிலங்குகள் முதுமலையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடப்பது வழக்கமாகும். இதன் காரணமாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு மாலையில் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்தன. அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிள்கள், கார்களில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சென்று கொண்டிருந்தனர். சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென வாகனங்களை விரட்டியது.
இதை கண்டு இருசக்கர வாகனத்தில் வந்த கர்நாடகாவை சேர்ந்த தம்பதி அச்சம் அடைந்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் போட்டு விட்டு தப்பி ஓடினர். இதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் சற்று தொலைதூரத்தில் நிறுத்தினார்கள். காட்டு யானை வந்த வேகத்தில் சாலையில் கிடந்த இருசக்கர வாகனத்தை பார்த்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதையடுத்து அந்த தம்பதியினர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. காட்டு யானையிடமிருந்து தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் முதுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications