Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குற்றலாம் சீசன் 2023: சுற்றுலா பயணிகளே உஷாரா இருங்க.. உங்களுக்கு முக்கியமான அப்டேட்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்மேற்கு பருவ மழை இப்போது தான் கேரளாவில் தொடங்கி உள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து வரத்தொடங்கி உள்ளது. இந்த வருடம் விரைவில் சீசன் களைகட்டும் என்ற எதிர்பார்பபு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இதனை அனுபவிக்க இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்த மூன்று மாதமும் குற்றாலத்தில் இதமான கிளைமேட் நிலவும். நல்ல குளிர், அடிக்கடி மழை, இயற்கை வனம், அதேநேரம் அவ்வப்போது வெயில் என பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

Kutralam season 2023: Tourists beware, Important update for you

நன்றாக கறி விருந்து சாப்பாட்டுடன், மூன்று நேரமும் மக்கள் குளித்து மகிழ்வார்கள், இரவில் கூட மக்கள் அருவிகளில் உற்சாகமாக குளிப்பார்கள். 24 மணி நேரமும் குற்றால அருவிகளில் மக்கள் கூட்டம் அலை மோதும்.

கடந்த 2020, 2021, ஆகிய வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை இருந்தது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர் மேலும் இதனை நம்பி இருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2021 டிசம்பருக்கு பிறகு தான் நிலைமை சரியானது. 2022ல் சீசன் ஓரளவு சிறப்பானதாக இருந்தது. இந்த ஆண்டு இன்னமும் முழுமையாக சீசன் தொடங்க்வில்லை. கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீரின்றி வறண்டு காணப்பட்டது.

இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் மிகத்தாமதமாகவே தொடங்கி உள்ளது. தனைத் தொடர்ந்து மலைப்பகுதியில் சாரல் மழை தான் பெய்து வருகிறது. பிரதான அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து சரிவர இல்லை. அதேநேரம் எப்போது வேண்டுமானாலும் குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.

Kutralam season 2023: Tourists beware, Important update for you

இந்த வாரத்திற்குள் குற்றாலத்தில் நல்ல மழை பெய்து சீசன் களை கட்ட தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே குற்றாலத்தில் சீசன் துவங்கிவிட்டதாக வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை தொடர்ந்து பலர் குற்றாலத்திற்கு வர முயற்சி செய்கிறார்கள். உண்மையில் குற்றாலத்தில் சீசன் இன்னமும் தொடங்கவில்லை.

ஜூன் மாதம் 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றாலத்தில் சீசன் துவங்காத போதிலும் கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் அதிகளவில் காற்று வீசுகிறது. கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பாறைகளாக காட்சியளித்து வந்த குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கி உள்ளது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது. ஆனால தண்ணீர் குளிக்கும் அளவிற்கு இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

இதனிடையே வெயில் அடித்தாலும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் மேலும் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் விரைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Kutralam season 2023: Tourists beware, Important update for you

குற்றால அருவிகள் எத்தனை உள்ளது என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்:

பேரருவி - மெயின் அல்லது பெரிய குற்றால அருவி என்று அழைப்பார்கள். 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கிமீ தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக விழுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் காணப்படுகிறது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5கிமீ தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் அமைந்துள்ளது.

பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) -இது ஐந்தருவியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி தருகிறார்கள்.

புலியருவி -குற்றாலத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் 15 கிமீ தொலைவில் அழகனாறு நதியில் அமைந்துள்ளது.

பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+