ஆஹா! மைசூர் டூ கடலூர் வரை விரைவு ரயில்.. கோடை காலத்தில் சூப்பர் அறிவிப்பு.. மாஸ் ரயில்வே !
திருச்சி: திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் மைசூா் - சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி வரும் 12 ஆம் தேதி காணொலி மூலம் தேசியளவில் ரூ. 89 ஆயிரம் கோடியிலான ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய வந்தே பாரத் ரயில்கள், ஒரு பொருள் ஒரு ரயில் நிலைய கடைகள், புதிய குட்ஷெட்டுகள் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

இதில் திருச்சி கோட்டத்தில் 44 ரயில் நிலையங்களில் 60 ஒரு பொருள் ஒரு ரயில் நிலைய விற்பனைக் கடைகள், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டியில் தலா ரூ. 7 கோடியில் கட்டப்பட்ட குட்ஷெட்டுகள், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
திருச்சி கோட்டத்தில் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்புக் கடைகள் அமைக்க இடம் தோ்வு நடைபெறுகிறது. திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் வாரியத்திடம் கேட்டுள்ளோம். மைசூா் - சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 மெமு ரயில்கள், ஏற்கெனவே ஓடிய சில ரயில்களை மீண்டும் இயக்கக் கேட்டுள்ளோம்.
ரயில்வே வாரியம் உரிய முடிவெடுத்து அறிவிக்கும் என நம்புகிறோம். திருச்சி கோட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் இந்த வசதி இல்லையெனப் புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பேட்டியின் போது முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா், முதுநிலைக் கோட்ட தொலைத்தொடா்பு மேலாளா் இரப்பா பிருக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மைசூர் முதல் கடலூர் வரை 449 கி.மீ தூரத்தில் உள்ளது. இதற்காகும் பயண நேரம் 9 மணி நேரம் ஆகும்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர், ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கடலூர், அந்த வழித்தடங்களில் உள்ளவர்கள் மைசூருக்கு சென்று அங்கு மைசூர் அரண்மனை, சாமுண்டி மலைத் தொடர்கள், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம், மணற்கலை அருங்காட்சியகம், லலிதா மஹால் பேலஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கோடை விடுமுறையை குதூகலமாக்கலாம்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications