ஆஹா! மைசூர் டூ கடலூர் வரை விரைவு ரயில்.. கோடை காலத்தில் சூப்பர் அறிவிப்பு.. மாஸ் ரயில்வே !
திருச்சி: திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் மைசூா் - சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி வரும் 12 ஆம் தேதி காணொலி மூலம் தேசியளவில் ரூ. 89 ஆயிரம் கோடியிலான ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய வந்தே பாரத் ரயில்கள், ஒரு பொருள் ஒரு ரயில் நிலைய கடைகள், புதிய குட்ஷெட்டுகள் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

இதில் திருச்சி கோட்டத்தில் 44 ரயில் நிலையங்களில் 60 ஒரு பொருள் ஒரு ரயில் நிலைய விற்பனைக் கடைகள், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டியில் தலா ரூ. 7 கோடியில் கட்டப்பட்ட குட்ஷெட்டுகள், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
திருச்சி கோட்டத்தில் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்புக் கடைகள் அமைக்க இடம் தோ்வு நடைபெறுகிறது. திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் வாரியத்திடம் கேட்டுள்ளோம். மைசூா் - சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 மெமு ரயில்கள், ஏற்கெனவே ஓடிய சில ரயில்களை மீண்டும் இயக்கக் கேட்டுள்ளோம்.
ரயில்வே வாரியம் உரிய முடிவெடுத்து அறிவிக்கும் என நம்புகிறோம். திருச்சி கோட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் இந்த வசதி இல்லையெனப் புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பேட்டியின் போது முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா், முதுநிலைக் கோட்ட தொலைத்தொடா்பு மேலாளா் இரப்பா பிருக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மைசூர் முதல் கடலூர் வரை 449 கி.மீ தூரத்தில் உள்ளது. இதற்காகும் பயண நேரம் 9 மணி நேரம் ஆகும்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர், ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கடலூர், அந்த வழித்தடங்களில் உள்ளவர்கள் மைசூருக்கு சென்று அங்கு மைசூர் அரண்மனை, சாமுண்டி மலைத் தொடர்கள், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம், மணற்கலை அருங்காட்சியகம், லலிதா மஹால் பேலஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கோடை விடுமுறையை குதூகலமாக்கலாம்.
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications