Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா! மைசூர் டூ கடலூர் வரை விரைவு ரயில்.. கோடை காலத்தில் சூப்பர் அறிவிப்பு.. மாஸ் ரயில்வே !

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் மைசூா் - சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி வரும் 12 ஆம் தேதி காணொலி மூலம் தேசியளவில் ரூ. 89 ஆயிரம் கோடியிலான ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய வந்தே பாரத் ரயில்கள், ஒரு பொருள் ஒரு ரயில் நிலைய கடைகள், புதிய குட்ஷெட்டுகள் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

Mysore to Chennai express train extended to Cuddalore


இதில் திருச்சி கோட்டத்தில் 44 ரயில் நிலையங்களில் 60 ஒரு பொருள் ஒரு ரயில் நிலைய விற்பனைக் கடைகள், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டியில் தலா ரூ. 7 கோடியில் கட்டப்பட்ட குட்ஷெட்டுகள், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

திருச்சி கோட்டத்தில் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்புக் கடைகள் அமைக்க இடம் தோ்வு நடைபெறுகிறது. திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் வாரியத்திடம் கேட்டுள்ளோம். மைசூா் - சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 மெமு ரயில்கள், ஏற்கெனவே ஓடிய சில ரயில்களை மீண்டும் இயக்கக் கேட்டுள்ளோம்.

ரயில்வே வாரியம் உரிய முடிவெடுத்து அறிவிக்கும் என நம்புகிறோம். திருச்சி கோட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் இந்த வசதி இல்லையெனப் புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா், முதுநிலைக் கோட்ட தொலைத்தொடா்பு மேலாளா் இரப்பா பிருக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மைசூர் முதல் கடலூர் வரை 449 கி.மீ தூரத்தில் உள்ளது. இதற்காகும் பயண நேரம் 9 மணி நேரம் ஆகும்.

தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர், ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கடலூர், அந்த வழித்தடங்களில் உள்ளவர்கள் மைசூருக்கு சென்று அங்கு மைசூர் அரண்மனை, சாமுண்டி மலைத் தொடர்கள், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம், மணற்கலை அருங்காட்சியகம், லலிதா மஹால் பேலஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கோடை விடுமுறையை குதூகலமாக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+