"மிதக்கும் பிரம்மாண்டம்.." சென்னை முட்டுக்காடு பகுதியில் மிதவை உணவகம் திறப்பு! வாவ் சூப்பரா இருக்கே
சென்னை: சென்னை ஈசிஆர் பகுதியில் அமைந்துள்ள முட்டுகாடு பகுதியில் இப்போது ஒரு அட்டகாசமான இடம் வந்துள்ளது. ஜாலியாக படகில் சென்று இயற்கையை ரசித்தவாரே சாப்பிட நாம் இதுவரை ஆழப்புலா தான் செல்ல வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது அதேபோல ஒரு அட்டகாசமான மிதக்கும் உணவகம் நம்மை செனனைக்கு வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நாம் தண்ணீரில் மிதக்கும் உணவகங்களை பார்த்து இருப்போம். குறிப்பாக கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் இதுபோல ஏகப்பட்ட போட் ஹவுஸ்கள் இருக்கும்.

இதற்காக கேரளா சென்று திரும்பியவர்கள், அந்த மாதிரி ஒரு இடம் தமிழகத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருப்பீர்கள்.. உங்கள் ஏக்கம் இப்போது நிறைவேறியுள்ளது. தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் இன்று முட்டுக்காட்டில் திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா:
தமிழகத்தில் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க மாநில சுற்றுலாத்துறை சார்பில் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஆண்டுக்கு பல லட்சம் பேர் வருகை தரும் நிலையில், இதர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர சுற்றுலாதத்துறை பல நடவடி்ககைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுகாடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் (TTDC), கொச்சியில் உள்ள கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இந்த மிதக்கும் உணவகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
மிதக்கும் உணவகம்:
"சீன்ஸ் குரூஸ்" (Seanz Cruise) என்று பெயரிடப்பட்டுள்ள இது மாநிலத்தின் முதல் மிதக்கும் உணவகமாக இருக்கும். 125 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த மிதக்கும் உணவகத்தில் மொத்தம் இரு தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 100 பேர் இந்த உணவகத்தில் உணவருந்தலாம். இங்கு பஃபே பாணியில் உணவு வழங்கப்படும். 3-கிமீ படகு சவாரியில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிகள் தங்கள் உணவை சாப்பிடலாம்.
6,000 சதுர அடி கொண்ட முதல் தளம் முழுமையாக ஏசி வசதியை கொண்டதாக இருக்கிறது. அங்கு டிஜே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இரண்டாவது தளம் திறந்தவெளியாக இருக்கிறது. அங்கு தான் பஃபே பாணியில் உணவுகள் வழங்கப்படும். ரூ. 5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மிதக்கம் உணவகத்தில் பாதுகாப்பு படகுகள், தீயணைப்பாண்கள் என தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உள்ளன. மேலும், இந்த மிதக்கும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பிற் லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும்.
எப்போது:
முட்டுக்காடு படகு இல்லத்தில் ஏற்கனவே படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகள் உள்ளன அப்போது அத்துடன் இந்த மிதக்கும் உணவகமும் சேர்ந்துள்ளது. இது இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீன்ஸ் குரூஸ் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
ECR போறீங்களா.. மொத்தமாக போடப்படும் 'எண்ட் கார்டு'.. விஸ்வரூபம் எடுத்த பிரம்மாண்ட உயர்மட்ட சாலை -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications