விசாவே தேவையில்லை.. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தாய்லாந்து.. ஆனால் ஒரு கண்டிஷன்
பாங்காக்: தாய்லாந்து நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் விசா எதுவும் இன்றி 60 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும். வரும் 11 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை என அறிவித்து இருந்த தாய்லாந்து அரசு, தற்போது கால வரையின்றி நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து. சுற்றுலாவிற்கு பெயர் போனதாகவும், உலக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் டாப் 10 நாடுகளில் ஒன்றாகவும் தாய்லாந்து உள்ளது. இந்தியா உள்பட சர்வதேச நாட்டு பயணிகள் பலரும் தாய்லாந்துக்கு அதிக அளவில் சுற்றுலா செல்கிறார்கள்.

தாய்லாந்து சுற்றுலா சென்று வர பெரிய அளவில் கட்டணமும் ஆகாது என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட இங்கு சுற்றுலா செல்வதை பார்க்க முடிகிறது. தாய்லாந்து நாட்டை பொறுத்தவரை சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியுள்ளது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபியில் 20 சதவீதத்தை சுற்றுலாத்துறையே பெற்றுள்ளது.
இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு நடவடிக்கைளை தாய்லாந்து அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விசா சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் விசா எதுவும் இன்றி 60 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும். இதற்கு முன்பாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
வரும் 11 ஆம் தேதியுடன் இந்த சலுகை முடிவடைய இருந்த நிலையில் தற்போது கால வரையின்றி நீட்டித்து தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய விதிகளின் படி 60 நாட்கள் வரை விசா எதுவும் இன்றி தாய்லாந்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கலாம். குடியேற்ற அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கூடுதலாக 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.
தாய்லாந்து நாட்டை பொறுத்தவரை அங்குள்ள பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரிய பகுதிகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து இழுக்க கூடியாதாக உள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. தாய்லாந்தில் நடைபெறும் இரவு நேர கொண்டாட்டங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து இழுக்க கூடியதாக உள்ளது.
தாய்லாந்து மட்டும் இன்றி மலேசியா, கத்தார், இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியர்கள் விசா இன்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications