Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுஷ்கோடிக்கு டிட்வா புயல் தந்த கிப்ட்.. அரிச்சல்முனையில் புதிய மணல்மேடு.. ராமேஸ்வரத்தில் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலா தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் டிட்வா புயலால் புதிய இயற்கை மாற்றம் அரங்கேறி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனையில் புதிய மணல் திட்டு உருவாகி உள்ளது. இந்த மணல் திட்டு டிட்வா புயல் தந்த பரிசு என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.. அந்த மணல் திட்டில் போய் அமருவதற்கு பறவைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் முக்கியமான இந்தியாவின் கடலோர முனையாக இருக்கிறது. இங்கு மூன்று பக்கமும் கடல் தான் காணப்படும். ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கு வராமல் பயணம் முழுமை அடையாது.அந்த அளவிற்கு முக்கியமானதலமாக இருக்கிறது. மத்திய அரசே பணம் ஒதுக்கி ரயில் பாதை அமைக்க அதிக ஆர்வம் காட்டியதும் தனுஷ்கோடிக்குத்தான். இப்போது தமிழக அரசு ஓகே சொன்னாலும், தனுஷ்கோடிக்கு ரயில் பாதை வந்துவிடும். அந்தஅளவிற்கு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருகிறது.

The gift that Cyclone Titli gave to Dhanushkodi A surprise on the new sand dune formed at Rameswaram

தனுஷ்கோடியை சுற்றி கடலில் ஏற்படும் மாற்றங்களால் மணல் திட்டுக்கள் மற்றும் தீவுகள் அமைந்துள்ளன. ராமேஸ்வரம் தீவைச் சுற்றிலும் சுமார் 21 சிறிய தீவுகள் இப்போது உள்ளன. இவை மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக இருக்கின்றன. தனுஷ்கோடிக்கு மிக அருகில் குருசடைத் தீவு என்ற ஒரு முக்கியமான தீவு உள்ளது.

இங்கு அரிய வகை கடல் பசுக்கள் மற்றும் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. அதேபோல் முயல் தீவு என்ற ஒரு சிறிய தீவு இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சிறிய தீவுஎன்கிறார்கள் உள்ளூர் மக்கள். நல்லதண்ணீர் தீவு என்ற ஒரு தீவும் இருக்கிறது. இங்கு நன்னீர் கிடைப்பதால் இப்படி அழைக்கிறார்கள். அதேபோல் புள்ளிவாசல் தீவு என்று ஒரு தீவு இருக்கிறது. பறவைகள் சரணாலயம் போல விளங்கும்.

இந்நிலையில் அண்மையில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்தது. கடல் சீற்றமும் மிக கடுமையாக இருந்தது. அப்போது நடந்த இயற்கை மாற்றத்தால் புதிய தீவு உருவாகி உள்ளது. இந்த தீவிற்கு வருவதற்கு பறவைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. புதிய மணல் திட்டு பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது.

இங்கு புறா உள்ளிட்ட பறவைகள் ஓய்வெடுத்து செல்கின்றன. இது காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது-. ராமேஸ்வரம் அருகே உள்ள பெரும்பாலான தீவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் ஆகும். எனவே வனத்துறையின் அனுமதி இல்லாமல் இங்கு செல்ல முடியாது. தற்போதைய நிலையில் ராமேஸ்வரம் வந்தால், குருசடைத் தீவுக்குச் செல்வதற்கு மட்டும் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்குப் படகு சவாரி வசதிகள் (மண்டபம் அருகில்) உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+