மதசார்பின்மை என சொன்னாலே பாஜகவுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது.. கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் அட்டாக்
நெல்லை: தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெரும் மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும், சிறுபான்மையினர் நலனில் அக்கற்றை கொண்டது திமுக அரசு தான் என்றும் கூறினார். மேலும் மதசார்பின்மை என சொன்னாலே பாஜகவுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது என்று விமர்சனம் செய்தார்.
நெல்லையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், குடிலை திறந்து வைத்து கேக் வெட்டினார். தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெரும் மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் மத பாகுபாடு இன்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்பும் உங்களுக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்போம். பார்த்து பார்த்து உங்களுக்கான திட்டங்களை செய்து வருகிறோம்.
மதசார்பின்மை என்ற வார்த்தை ஒன்றிய பாஜக அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என சிலர் யோசிக்கலாம். மதத்தின் பெயரால் உங்களின் உணர்வுகளை தூண்டுகிறார் என்றால் அவரை சந்தேகப்படுங்கள். சிற்பான்மையினர் நலனில் உண்மையான அன்பு கொண்ட இயக்கம் திமுக தான்.
இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒரு தாய் பிள்ளையாக வாழ வேண்டும். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். 16 தேவாலயங்களை ரூ.21.5 கோடி செலவில் சீரமைத்துள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications