நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவில் ”தேள்..” உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
நெல்லை: நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடை அல்வாவில் தேள் இருந்ததாக சங்கரன்கோவிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ எடுத்து பதிவிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத் துறை சாந்தி ஸ்வீட்ஸ் கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லை என்றாலே முதலில் நம் நியாபகத்துக்கு வருவது தித்திப்பான அல்வா தான். அதுவும் நெல்லை இருட்டுக்கடை அல்வா என்று சொன்னாலே வாயில் எச்சு ஊறும்.. அந்த அளவுக்கு நெல்லையில் அல்வா பேமஸ். நெல்லை வரும் வெளியூர் பயணிகள் கூட கட்டாயமாக அல்வாவை வாங்கி செல்வார்கள்.

நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா
இதில் நெல்லை டவுனில் உள்ள இருட்டுக்கடை அல்வாக்கு பிறகு மக்கள் அதிகம் விரும்பி வாங்கப்படுவதும், சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தான். நெல்லை ஜங்ஷனில் பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் இந்த அல்வா கடை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த கடை செயல்பட்டு வருகிறது. இருட்டுக்கடை அல்வா மாலை நேரத்தில் மட்டுமே வாங்க முடியும். ஆனால் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடையானது 24 மணி நேரமும் திறந்திருக்கும். 3 ஷிப்டுகள் படி ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நெல்லை புதிய பேருந்து நிலையம், ஜங்ஷனில் எண்ணற்ற சாந்தி ஸ்வீட்ஸ் கடை இருந்தாலும் எப்போதும் இந்த கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும். மிகவும் புகழ்பெற்ற இந்த கடையில் வாங்கப்பட்ட அல்வாவில் தேள் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அல்வா பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது குறித்து விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தேள் கிடந்ததாக புகார்
சங்கரன்கோவில் கீழ நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அன்பு. இவர் வேலை விஷயமாக கடந்த 13 ஆம் தேதி நெல்லை வந்துள்ளார். அப்போது அவர் சாந்தி ஸ்வீட்சில் 1 கிலோ அல்வா வாங்கியுள்ளார். 4 கால் கிலோ பாக்கெட்டுகளாக வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு சென்றதும் ஆசையோடு சாப்பிடுவதற்காக எடுத்தபோது, ஒரு அல்வா பாக்கெட்டில் ஏதோ பூச்சி இருப்பது போல் தெரிந்துள்ளது. இதையடுத்து உற்று பார்த்தபோது சிறிய அளவிலான தேள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அன்பு இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவிய நிலையில், திருநெல்வேலி உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ், நெல்லை ஜங்ஷனில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் கடை மற்றும் சிந்துபுந்துறையில் உள்ள குடோனில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அல்வாவில் எப்படி தேள் வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
குடோனில் ஆய்வு
குடோனில் ஆய்வு மேற்கொண்டபோது சாந்தி ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர், "இங்கு தேள் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. குடோனில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இந்த வெப்பமான பகுதிக்கு பூச்சிகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. இருந்தபோதிலும் இந்த விசாரணைக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார். மிகவும் புகழ்பெற்ற நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவில் தேள் இருந்ததாக பரவும் வீடியோ அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications