Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. என்ன அழகு! திருச்சி பக்கம் இப்படி ஒரு இடமா.. சொர்க்கம்யா! புளியஞ்சோலைக்கு உடனே வண்டிய விடுங்க

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாட்டின் இதயமாக கருதப்படும் மத்திய மாவட்டமான திருச்சியை சுற்றி ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில், உங்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க ஒரு சூப்பரான இடம் இருக்கிறது. வாங்க.. எழுத்தின் வழியாக ஒரு எட்டு அந்த பகுதிக்கு போயிட்டு வருவோம்.

தமிழ்நாட்டின் முக்கிய மாநகராட்சியாகவும், மத்திய மாவட்டமாகவும் திருச்சி உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களையும், பல மாவட்ட எல்லைகளையும் திருச்சி பகிர்ந்துகொண்டு உள்ளது. வட மாவட்டங்களில் பெரம்பலூர், அரியலூருடனும், கொங்கு மண்டலத்தில் சேலம், நாமக்கல், கரூருடனும் திருச்சி எல்லையை பகிர்கிறது.

How to go to Puliyancholai fall located in Trichy?

தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டையையும், டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூருடனும் எல்லையை பகிர்ந்து இருக்கிறது திருச்சி மாவட்டம். எனவே திருச்சியில் இருந்து தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதிக்கும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் குறைவான நேரத்துக்குள் சென்று வந்துவிடலாம். அதேபோல் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளேயும் ஏராளமான சுற்றுலா தளங்களும் இயற்கையை அள்ளித்தரும் இடங்களும் உள்ளன.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இடம்தான் புளியஞ்சோலை. சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதால் குற்றாலம் உள்ளிட்ட பல அருவிகளும், இயற்கை தளங்களும் செயற்கைகளால் நிரம்பிவிட்ட நிலையில் இன்னும் இயற்கை அழகு மாறாமல் காடும், மலையும், அருவியும், நீரோடையும் கொண்ட அழகிய பகுதிதான் புளியஞ்சோலை.

How to go to Puliyancholai fall located in Trichy?

பெயருக்கு ஏற்றார்போலவே அது ஒரு சோலைதான். கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் நிரம்பி இருக்கும் திருச்சியில் வாழும் மக்கள் ஒருநாள் நகர பரபரப்புகளுக்கு விடைகொடுத்துவிட்டு ஜாலியாக புளியஞ்சோலைக்கு ஒரு ட்ரிப் சென்று வரலாம். மலையேற்றம் செல்ல பிடிக்கும், ஆனால் பயமாக இருக்கிறது என்று சொல்பர்கள் புளியஞ்சோலைக்கு வந்தால் எளிதில் மலையேறலாம். அது ஒரு பயிற்சியாகவும், அழகிய அனுபவமாகவும் அமையும்.

ஒரு காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள். "மேற்கு திசையில் ஒரு பெரிய மலை. மாலை வேளையில் அதில் எட்டிப்பார்க்கும் சூரியன். மலை உச்சியில் இருந்து கொட்டும் அருவி அப்படியே தரையில் பட்டு, நீரோடையாகவும், ஆறாகவும் பாறைகளுடன் மல்லுக்கட்டி ஓடுகிறது. கண்ணாடி போன்ற தண்ணீர். கண்களுக்கு தெரியும் குட்டி குட்டி மீன்கள். அவை கால் விரல்களுக்கு புகுந்து விளையாடுகின்றன. திரும்பும் திசையெங்கும் பச்சை பசேலென்ற மரங்கள். ஆங்காங்கே அடுக்கடுக்கான மலைக் குன்றுகள்." நினைத்தாலே பரவசம் வருகிறதல்லவா?

How to go to Puliyancholai fall located in Trichy?

இந்த கற்பனையை நிஜமாக்க நீங்கள் புளியஞ்சோலைக்கு நிச்சயம் செல்ல வேண்டும். கொல்லி மலையின் அடிவாரமான புளியஞ்சோலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. இங்குள்ள மலைக் குன்றுகளின் மீது எளிதில் ஏறி அமரலாம். விளையாடலாம். அதை தாண்டி பித்துக்குளி குகைக்கு நடந்து சென்று சுகத்துடன் சுவாரஸ்யத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். இதன் அருகிலேயே தங்குமிட வசதிகளும் உண்டு.

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து புளியஞ்சோலை செல்ல 27 கிலோ மீட்டர் தொலைவாகும். திருச்சியில் இருந்து துறையூருக்கு ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 79 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த புளியஞ்சோலை அமைந்து உள்ளது. செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை புளியஞ்சோலையின் அழகை முழுமையாக அனுபவிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+