தீபாவளி வந்தாச்சு.. காசியில் கங்கா ஸ்நானம் செய்யணுமா?.. ஐஆர்சிடிசியின் சூப்பர் பிளான்!
திருச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் - காசி இடையே, தீபாவளி கங்கா ஸ்நான சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என்று ஐஆா்சிடிசி தென்மண்டலப் பொது மேலாளா் பி.ராஜலிங்கம்பாசு தெரிவித்தார்.
இதுதொடா்பாக திருச்சி பிரஸ் கிளப்பில் வியாழக்கிழமை ஐஆா்சிடிசி தென்மண்டலப் பொது மேலாளா் பி.ராஜலிங்கம்பாசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆா்சிடிசி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நிகழாண்டில் இதுவரை 9 பாரத் கெளரவ் சுற்றுலா சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது, 9-ஆவது சிறப்பு சுற்றுலா ரயிலாக தமிழக மக்கள், குறிப்பாக முதியவா்கள் பயன்பெறும் வகையில், நவம்பா் 9 முதல் 17 ஆம் தேதி வரை சுற்றுலா செல்லும் வகையில், தென்காசி மற்றும் காசி இடையே இயக்கப்படுகிறது. தீபாவளி கங்கா ஸ்நான சிறப்பு ரயில் என்ற பெயரில், தீபாவளி தினத்தில் காசியில் கங்கா ஸ்நானம் செய்யும் வகையில் இந்தச் சுற்றுலா (ரயில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ய ரூ. 16,850, மூன்றடுக்கு ஏசி பெட்டிக்கு ரூ.30,500 என்ற வகையில் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் தங்குமிடம், உள்ளூா் பகுதிகளில் பாா்வையிடும் வகையில், உள்ளூா் போக்குவரத்து, சைவ உணவு, பயணக் காப்புறுதி, தனியாா் பாதுகாவலா் வசதி உள்ளிட்டவைகள் அடங்கும். இந்த ரயில் தொடா்பான அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து இதுவரை 300 போ் முன்பதிவு செய்துள்ளனா். மொத்தம் 600 பேரை அழைத்துச் செல்ல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
ஐஆா்சிடிசி உதவி மேலாளா் பாஷித் அகமது (மதுரை) உடனிருந்தாா். மேலும் விவரங்களுக்கு, 82879 31977 என்ற எண்ணில் சுற்றுலா (மதுரை) அலுவலரை (ஆா். ராஜேஷ் ) அணுகலாம்.












Click it and Unblock the Notifications