ஊட்டி ஓட்டலில் ஐந்து இளம் பெண்கள்.. உடை மாற்றும் அறையில் மர்ம நபர்.. சுற்றுலா தலத்தில் இப்படியுமா?

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 20 முதல் 25 வயதுள்ள 5 இளம்பெண்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு பரிமாறுதல் உள்பட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். இவர்கள் ஐந்து பேரும் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்கள் உடை மாற்றி உள்ளனர். அப்போது திடீரென மர்ம நபர் அங்கு மறைந்திருந்து வீடியோ எடுப்பது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஊட்டியில் ஏராளமான விடுதிகள், ஓட்டல்கள் அமைந்துள்ளன. ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். உணவு பரிமாறுவது, உணவு சமைப்பது, வரவேற்பாளர், அறையை சுத்தம் செய்வது உள்பட பல்வேறு பணிகளில் வெளிமாநில பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுகிறார்கள்..

Youth arrested for filming 5 young women changing clothes on cell phone in Ooty

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம்பெண்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு பரிமாறுதல் உள்பட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஐந்து பேரும் திருமணம் ஆகாதவர்கள் ஆவர். இவர்கள் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்கள் உடை மாற்றியிருக்கிறார்கள். அப்போது மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் சத்தம் போட்டனர். இதுகுறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன் பேரில் நீலகிரி மாவட்டம் ஊட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதில் வடமாநில இளம்பெண்கள் தங்கி இருந்த வாடகை வீட்டின் அருகில் மற்றொரு வீட்டில் வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதாகும் கிரிதரன் என்பவர் இளம்பெண்களை செல்போனில் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். நாய்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில நாட்களாக கிரிதரன் தனது வீட்டிற்கு செல்லும் போது, ஜன்னல், கதவு வழியாக இளம்பெண்களை தொடர்ந்து நோட்டமிட்டு வந்து உள்ளார். பின்னர் அவர்கள் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்ததும் தெரியவந்ததாக போலீசார் விசாரணை குறித்து தெரிவித்தனர. இதுதொடர்பாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கிரிதரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி, வேறு யாரையும் ஆபாச வீடியோ எடுத்து உள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+