Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையும் இருக்கு! 22 மாவட்டங்கள் டார்கெட்.. அடுத்த 3 மணிநேரம் கொட்டப்போகும் மழை.. இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட மொத்தம் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டி மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 22 districts in Tamil Nadu including Chennai will get rain today from 4 PM to 7 PM

இந்நிலையில் தான் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை உள்பட தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணிகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமதாநபுரம், தென்காசி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சென்னையில் அதிகளவில் பெய்துள்ளது. இயல்பான மழையளவை விட 50 சதவீதம் வரை சென்னையில் வடகிழக்கு பருவமழை கொட்டியுள்ளது. சென்னையில் இந்த மழை அதிகரிப்புக்கு வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தான் காரணமாகும். இதனால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது.

மாறாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது இயல்பை விட 3 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் மழை பெய்யும்பட்சத்தில் இயல்பான அளவை வடகிழக்கு பருவமழை எட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி இன்று தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை 3 மணிநேரம் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+