மழை இன்னும் எண்ட் கார்டு போடல மக்களே! 5 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த டிச.18ம் தேதியோடு வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியிருக்கிறது. இன்று இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் அலர்ட்தான் விடுக்கப்பட்டிருக்கிறது என்பதால் பெரிய அளவுக்கு ஆபத்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications