Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென வந்த பெரிய கூண்டு.. 2 பேர் சிக்கிய வேளச்சேரி பள்ளத்தில் 4வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளச்சேரியில் 56 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 3 நாட்களைக் கடந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்காக பெரிய கூண்டு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் இன்னும் முழுமையாக மழை நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ள நீர் சூழ, அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 Big man cage arrived in velachery to rescue workers from pit

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை கொட்டிய நிலையில், திங்கட்கிழமை பகலில், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள எல்.பி.ஜி பெட்ரோல் பங்க் அருகே கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு, 50 அடி ஆழத்துக்கும் அதிகமான பள்ளமாக மாறியது. அருகில், கண்டெய்னரில் வசித்து வந்த கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் அந்தப் பள்ளத்தில் சிக்கினர். அதில், 2 பேர் மீட்கபட்ட நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்று வருகிறது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் தமிழக தீயணைப்பு வீரர்களும் இணைந்து அந்த இருவரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்படும் கட்டடத்திற்கு அடித்தளம் போடுவதற்காக தொழிலாளர்கள் அங்கு பள்ளம் தோண்டி வந்துள்ளனர். இந்நிலையில் புயல் காரணமாக பெருமழை பெய்ததால் சிறிய அளவில் தோண்டப்பட்ட பள்ளம் விரிசல் விட்டு 80 அடி பள்ளமாக மாறிய நிலையில், உள்ளே தொழிலாளர்கள் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உள்ளே சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. பள்ளம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருப்பதால் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர். எனினும், நீர் தொடர்ந்து ஊறியதால், ராட்சத பம்ப்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றியும், இன்னும் பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது.

4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் சூழலில், அங்கு பள்ளத்தில் இருந்து மழைநீரை அகற்றும் திட்டம், பலன் அளிக்காத நிலையில், அதிக திறன் கொண்ட பெரிய டி.சி கிரேன் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரிய கூண்டு ஒன்று அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுரங்கப் பணிகள், பெரிய கிணறுகளில் பயன்படுத்தப்படும் கூண்டு அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆழமான கிணறு போன்ற பகுதிகளில், அல்லது தீ விபத்துகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க, மனிதர்கள் நேரடியாகச் செல்ல முடியாத நிலையில், பெரிய அளவிலான கூண்டு உள்ளே இறக்கப்பட்டு, அதன் மூலம் மீட்கப்படுவது வழக்கம். இந்நிலையில், அதுபோன்ற கூண்டு, வேளச்சேரியில் தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, கிரேனில் பொருத்தப்பட்டது.

இந்த கூண்டு வாயிலாக, மீட்புப் படையினர், தண்ணீர் தேங்கியுள்ள பள்ளத்திற்குள் அனுப்பப்படுவார்களா எனத் தெரியவில்லை. இதுவரை, பள்ளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் முயற்சிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், இந்த கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளதன் மூலம், மீட்பு பணிக்ள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+