விடிஞ்சா தீபாவளி.. சென்னையில் மழை இருக்குமா? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
சென்னை: நாளை தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், ஆங்காங்கே மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் நாளை மழை இருக்குமா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அழுதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, "நாளைக்கு நம்ம சென்னைக்கு மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய பெய்யும்.

இன்றிலிருந்து நாளைக்கு வரைக்கும் வட தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் கனமழையை எதிர்கொள்ளும். எனவே அந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று தொடங்கி நாளை மாலை வரை அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்யாது. குறிப்பிட்ட சில பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications