சென்னையில் இனி வெயிலுக்கு லீவ் தான்.. கோடை மழை எப்போது? தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்தாலும், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனிடையே, சென்னைக்கு எப்போது மழை பெய்ய தொடங்கும் என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த வாரத்தை விட தற்போது சற்று தணிந்துள்ளது. உள் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்ததால் மக்கள் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பித்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அதே வேளையில் தலைநகர் சென்னையில் பெரிதாக வெயிலின் தாக்கம் குறையவில்லை.

தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக மழை பெய்த போதிலும் சென்னையில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் மழை இல்லை. வெயிலின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்துக்கொண்டு இருக்கும் சென்னை மக்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக மழை எப்போது பெய்யும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தனது தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- கிரிக்கெட் போட்டி முடிந்ததும் மழை மேகங்கள் பெங்களூரை எட்டிவிட்டன. பெங்களூரின் சில இடங்களில் இரவில் மழை பெய்யும். சென்னைக்கு 15 ஆம் தேதியில் இருந்து மழை பெய்ய தொடங்கும். 18 ஆம் தேதி நடைபெறும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது" என்று பதிவிட்டுள்ளர்.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16ம் தேதி அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 17 மற்றும் 18ம் தேி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications