School Leave: வெளுத்து வாங்கிய கனமழை.. டிசம்பர் முதல் நாளே பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவை அரசு அறிவிப்பு
சென்னை: புதுவையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (School Leave) அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை புதுவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கிய முதல் நாளே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் காட்டிய டிட்வா புயல்
கடந்த 27 ஆம் தேதி தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் கடந்த இரு நாட்களாக தமிழகத்தை அச்சுறுத்தியது. வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கி வரிசையாக அப்படியே வட மாவட்டங்களான சென்னை வரை மழை தொடர்ந்து பெய்து வந்தது.
சாரல் மழை போல தொடர்ந்து கொட்டியது. ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது. நேற்று இரவே சென்னை, புதுவை, காரைக்கால், விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது. இன்றும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்று மாலையில் டிட்வா புயலின் வேகம் குறைந்தது.
வலுவிழந்த புயல்
தொடக்கத்தில் 12 கிமீ வேகத்தில் புயலின் வேகம் இருந்த நிலையில் பின்னர் குறைந்தது. பின்னர் மீண்டும் அதிகரித்தது. தொடர்ந்து அப்படியே குறைய தொடங்கியது. இந்த நிலையில் சென்னைக்கு 150 கிமீ தொலைவில் இருந்த போது டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
எனினும் டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், புதுவை, காரைக்கால், செங்கல்பட்டு, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் நாளை திங்கட்கிழமை புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வடியாததாலும் நாளை காலை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications