நெருங்கும் புயல்.. மயிலாடுதுறை டூ கன்னியாகுமரி வரை கொட்டப்போகும் கனமழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: இலங்கைக்கு அருகே கடல் பகுதியில் உருவான டிட்வா புயல் தற்போது இலங்கையை கடுமையாக தாக்கி வருகிறது. இந்நிலையில் இது தென் தமிழகம் நோக்கி முன்னேறி வருகிறது என்றும், இதன் காரணமாக இரவு 7 மணி வரை மயிலாடுதுறை தொடங்கி கன்னியாகுமரி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்" என்று தெரிவித்திருக்கிறது.

தற்போது புயுல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சூறைக்காற்று வீசி வருகிறது. தங்கச்சிமடம், ஐயந்தோப்பு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பாதுகாப்பு கருதி தனுஷ்கோடியிலிருந்து மக்கள் முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications