டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 20 வரை மழை! பயிர் அறுவடை செய்ய வாய்ப்பில்லை! ஹேமசந்திரன் தகவல்
சென்னை: டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக அறுவடை பணிகள் முடங்கியதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கூறியிருப்பதாவது: டெல்டாவில் பரவலாக மழை! அறுவடை பணிகள் முடக்கம்!
==> டெல்டா மாவட்டங்களான #கடலூர் #மயிலாடுதுறை #காரைக்கால் #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
==> மழை காரணமாக டெல்டாவில் அறுவடை பணிகள் முடங்கியுள்ளது.
==> அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு டெல்டாவில் தூறல்/சாரலுடன் மிதமான மழை தொடரும்.
==> டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 20ம் தேதி முற்பகல் 10 மணி வரை மழை வானிலை நிலவும். அறுவடை பணிகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒத்திவையுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் மழை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (18-01-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (19-01-2025) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-01-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-01-2025 மற்றும் 22-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-01-2025: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (18-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: * தமிழக கடலோரப்பகுதிகள்: 18-01-2025 முதல் 19-01-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 20-01-2025 மற்றும் 21-01-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.












Click it and Unblock the Notifications