டிட்வா எதிர்பார்த்த மழையை கொடுத்ததா? சென்னையில் வடகிழக்கு பருவமழை நிலவரம் இதுதான்!
சென்னை: டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு இருந்தது. இருப்பினும் மழை கடந்த ஆண்டை போல இல்லை என்ற பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், சென்னையில் பெய்த மழையின் அளவு என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்திருக்கிறது.
அக்.1ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை தொடங்கி அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருந்தது. குறிப்பாக இலங்கையை ஒட்டி உருவாகி சென்னையை நோக்கி வந்த டிட்வா புயல், சென்னைக்கு அதிக அளவில் மழையை கொடுத்திருந்தது.

இருப்பினும் வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை இயல்பாக பெறும் மழையின் அளவை விட 2% குறைவாகே பெற்றிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் இயல்பாக 731.9 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 715.1 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையை ஒட்டி மாவட்டங்களை பொறுத்தவரை, திருவள்ளூரில் இயல்பாக 562 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 710.5மி.மீ. மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் இயல்பாக 528.9 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 448.9 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 15% குறைவாகும். அதேபோல செங்கல்பட்டில் 448.7 மி.மீ மட்டுமே மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 29% குறைவாகும். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் பருவமழை இயல்பை விட மிக குறைவாக பதிவாகியிருக்கிறது.
மொத்தமாக செங்கல்பட்டு, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருப்பூர் என 6 மாவட்டங்களில் பருவமழை 20%க்கும் வரை அடிவாங்கியிருக்கிறது. அதிகபட்ச மழைப்பொழிவு எனில், திருநெல்வேலி மாவட்டத்தில் 961.2 மி.மீ அளவுக்கு பெய்திருக்கிறது. இது இயல்பான மழையை விட 119% அதிகமாகும்.
விருதுநகர், வேலூர், திருவாரூர், திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை என 7 மாவட்டங்களில் பருவமழை 20%க்கும் அதிகமாக பெய்திருக்கிறது.
அதேபோல தற்போது தமிழ்நாடு முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. சென்னை, ஓசூர், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் டிச.15-20 தேதிகளுக்குள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு











Click it and Unblock the Notifications