நைட் முழுக்க ஜில் கிளைமேட் தான்.. இந்த 13 மாவட்டங்களில் இரவு கொட்ட போகுது மழை.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் வந்துவிட்ட நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் ஆங்காங்கே சற்று மழையும் பெய்து வெப்பத்தைக் குளிர்வித்து வருகிறது. இதற்கிடையே இன்று இரவு 10 மணி வரை, அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது கோடைக் காலம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் மே மாதம் அக்னி நட்சத்திரம் சமயத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் மார்ச், ஏப்ரல் மாதமே வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்தாண்டும் அதற்கு விதி விலக்கு இல்லை.

கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே வெப்பம் மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த மாதம் சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில், இந்த மாதம் பெரும்பாலான இடங்களில் வெப்பம் உச்சத்திற்குப் போய் வருகிறது. இந்த அதீத வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை
அதேநேரம் ஆங்காங்கே சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மாலை நேரங்களில் பெய்யும் இந்த மழை வெப்பத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்த மாவட்டங்கள்
அதாவது இரவு 7 மணி வரை திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் இரவ 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பம்
இன்றைய தினம் வெப்பத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல ஈரோட்டில் 103.28 வெப்பமும் கரூர் பரமத்தியில் 103.1 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. தஞ்சை 102.2 டிகிரி பாரன்ஹீட், சேலம் 101.66 டிகிரி பாரன்ஹீட், திருத்தணி 100.94 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் (ஏப்ரல் 27, 28) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 29 முதல் மே 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (27-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (28-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications