வெயிலுக்கு குட்பை.. கொட்டப்போகுது மழை.. சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு இனி மழை வெளுக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல் தரைக்காற்று 50 கிமீ வீசக்கூடும் என்றும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகளை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. எனினும் மாலை நேரங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற அலர்டும் விடப்பட்டுள்ளது.
இதேபோன்று நாளை மறுநாள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 18 ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று தரைக்காற்று 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications