புலி வருது கதை ஆகிடும்! வானிலை மையம் அலர்ட் கொடுத்தது.. ஆனால் ஒரு சொட்டு மழை இல்லை.. வெதர்மேன் பரபர
சென்னை: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில், ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளர்.
தென் மாவட்டங்களில் டிசம்பர் 30, 31 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ததே தவிர சொல்லும்படியாக எங்கும் கனமழை இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலும் மேக மூட்டமும் வெயிலும் மாறி மாறி இருந்ததே தவிர மழை பெரிதாக இல்லை. தற்போது அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் என்றும் நேற்று நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதேபோல் இன்று செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என எச்சரித்து இருந்தது.
மழை பெய்யவில்லை: இதனிடையே, இன்று பிரபல தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:- தென் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஆனால் உண்மையில் ஒரு சொட்டு மழை கூட இல்லை.

சமீபத்திய தாக்கத்திற்கு பிறகு இதே டிரெண்ட் நீடித்தால் உண்மையாகவே கனமழை பெய்யும் போது மக்கள் இந்த வானிலை எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார். அதோடு புலி வருது.. புலி வருது.. என தினமும் அச்சுறுத்தி விட்டு ஒருநாள் உண்மையாகவே புலி வரும் போது எச்சரிக்கும் நபரை.. ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற கதையை சுட்டிக்காட்டும் வகையில் போட்டோ ஒன்றையும் வெதர்மேன் தனது பதிவில் கூறியுள்ளார்.
அடுத்த 4-5 நாட்களுக்கு: வெதர்மேனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு வெதர் மேன் கொடுத்த வானிலை முன்னறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழையோ.. கனமழைக்கோ எதிர்பார்க்க முடியாது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும். எனவே அடுத்த 4-5 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.
உங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டே புத்தாண்டில் அடியெடுத்து வையுங்கள். கருமையான மேகங்களை கண்டோ லேசான மழைத்துளிகளை கொண்டோ நெல்லை, தூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம். சென்னை, நெல்லை, தூத்துக்குடிக்கு இந்த ஆண்டு கொஞ்சம் கடினமானதாக இருந்தது. தேவை இல்லாத நேரத்தில் மக்கள் வானிலை பற்றிய அச்சத்துடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜனவரி முதல் வாரம் முடியும் நேரத்திலும் இரண்டாவது வாரத்திலும் தான் தமிழ்நாட்டில் மழையை எதிர்பார்க்கலாம்" என்று கூறியிருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications