Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கனமழை.. திடீரென கொட்டித்தீர்த்ததால் வாகன ஓட்டிகள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இன்று இரவு 7.30 மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூட தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்தது.

Heavy rains in Chennai and surrounding area, motorists are in Affected

இதே போல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வருகிற 10 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இரவு 7.30 மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக சென்னை பாரிமுனை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார் பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், மெரினா, சேப்பாக்கம், தியாகராய நகர், பட்டாபிராம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் சென்னை நகரம் குளிர்ந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+