இந்தா ஆரம்பிச்சிடுச்சுல்ல.. சென்னையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் மழை.. நள்ளிரவிலும் சம்பவம்!
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆலந்தூர் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 1 மணிக்குள் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், சாந்தோம் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மேலும், வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சோழிங்கநல்லூர், சேலையூர், தாம்பரம், மேடவாக்கம், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னை நகர் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது அதே இடத்தில் நிலவுவதாக கூறப்பட்டது. அதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது வரவிருக்கும் 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை அறிவித்தது. இந்த தாழ்வுப்பகுதி வரும் 2 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும் நவம்பர் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "நவம்பர் 12-17 வரை மழையின் தீவிர நிலை, இதில் (சென்னை) நவம்பர் 12 முதல்16 வரை இடைவேளையுடன் தினசரி மழையைப் பெறும். அதோடு, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்று இரவு அல்லது நாளை காலை முதல் 5-வது கட்ட பருவமழை தொடங்கும். நாளை, நவம்பர் 12ஆம் தேதி சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது." எனக் கூறியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications