சென்னையை மிரட்டும் மாமழை! தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கில் 490 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் புயலாகவும் மாறுமா என்பது குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர், பெருங்குடி, முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பலரது வீடுகளுக்குள்ளும் தண்ணீர் உட்புகுந்துவிட்டது. நேற்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த மாவட்டங்களுக்கு என்பதை பார்க்கலாம்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- ராணிப்பேட்டை
- புதுச்சேரி
- காரைக்கால்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- சேலம்
- விழுப்புரம்
- தருமபுரி
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- கிருஷ்ணகிரி












Click it and Unblock the Notifications