பெங்களூர் வானிலையில் மாற்றம்! முன்கூட்டியே தொடங்குகிறதா கோடைக்காலம்?
பெங்களூர்: கர்நாடகா முழுவதும் வறண்ட வானிலை தொடர்வதால் வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்கு முன் கூட்டியே கோடை தொடங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காலை வேளைகளில் குளிர் நிலவி வருகிறது. ஆனால் பெங்களூர் போன்ற இதமான வானிலை நகரத்தில் கடந்த 12 ஆம் தேதி அன்று கடுமையான வெயில் வாட்டியதாக சொல்லப்படுகிறது.

அதாவது இந்த சீசனிலேயே அன்றைய தினம்தான் அதிகபட்சமாக 33.6 டிகிரி வெப்பநிலை இருந்தது. இந்த வெப்பநிலை எல்லாம் பொதுவாக ஏப்ரல் மாதங்களில்தான் பெங்களூரில் இருக்கும். ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்துகிறது.
இதுகுறித்து நம்ம கர்நாடகா வெதர் எனும் எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தற்போது பெங்களூரில் உள்ள வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம். இதை பார்க்கும் போது முன்கூட்டியே கோடை காலம் தொடங்கி விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
எனினும் இரவு நேரங்களில் வெப்பநிமலை 16 டிகிரியாக இருப்பதால் குளிர் நிலவுகிறது. இந்த வெப்பநிலை இயல்பை விட 1.4 டிகிரி குறைவு ஆகும். இது போன்று சீசனே இல்லாமல் பெங்களூரில் வெப்பம் ஏற்படுவதற்கு உலகம் வெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அது போல் தற்போது நிலவி வரும் லா நினோ விளைவால் தென்கிழக்கு மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் கனமழையை கொண்டு வந்துள்ளது. இதனால் கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் தீபகற்ப இந்தியாவில் அடுத்த 5 முதல் 6 வாரங்களுக்கு வெப்பம் இருக்கும்.
மிதமானது முதல் லேசானது வரையிலான கிழக்கத்திய மற்றும் தென் கிழக்கத்திய காற்றால் கர்நாடகா முழுக்க வறண்ட வானிலையே தொடரும். பெங்களூரின் புறநகர் பகுதிகளில் பனி மூட்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
காலை நேரங்களில் பெங்களூரில் தெளிவான மேகம் இருக்கும். இனி வரும் காலங்களில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 16 டிகிரியும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இது போல் வெப்பநிலை அதிகரிப்பதும் இரவு பகலில் மாற்றங்கள் உருவாவதை பார்த்தால் முன்கூட்டியே கோடை தொடங்கும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரில் இன்றைய தினம் 32 டிகிரி சென்டிகிரேட்டாக உள்ளது.
பெங்களூர் போன்ற நகரங்களில் வெயில் காலம் என்றாலும் அதிகம் கொளுத்தாது என்பார்கள். புழுக்கமும் இருக்காதாம். ஆனால் இந்த முறை கோடை தகிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் உலக வெப்பமயமாதலாக இருக்கலாம்.
கடந்த 1990 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 30.9 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 17.6 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பிப்ரவரி மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 33 டிகிரி முதல் 35.5 டிகிரியாகவும் குறைந்தபட்சமாக 13 டிகிரி முதல் 16.5 டிகிரியாகவும் இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 17, 2005 ஆம் ஆண்டு பெங்களூரில் 35.9 டிகிரி வெப்பநிலையால் நகரமே தகித்தது. அதே வேளையில் 1884 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வெப்பநிலை 9.6 டிகிரியாக இருந்ததால் குளிராக இருந்தது.
கோடை எப்போது தொடக்கம்: மகா சிவராத்திரியையொட்டி பெங்களூரில் கோடை தொடங்கலாம் என தெரிகிறது. பெங்களூரில் ஜனவரிக்கு பிறகு பிப்ரவரியில் மழை இல்லை.
-
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications