பெங்களூர் வானிலையில் மாற்றம்! முன்கூட்டியே தொடங்குகிறதா கோடைக்காலம்?
பெங்களூர்: கர்நாடகா முழுவதும் வறண்ட வானிலை தொடர்வதால் வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்கு முன் கூட்டியே கோடை தொடங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காலை வேளைகளில் குளிர் நிலவி வருகிறது. ஆனால் பெங்களூர் போன்ற இதமான வானிலை நகரத்தில் கடந்த 12 ஆம் தேதி அன்று கடுமையான வெயில் வாட்டியதாக சொல்லப்படுகிறது.

அதாவது இந்த சீசனிலேயே அன்றைய தினம்தான் அதிகபட்சமாக 33.6 டிகிரி வெப்பநிலை இருந்தது. இந்த வெப்பநிலை எல்லாம் பொதுவாக ஏப்ரல் மாதங்களில்தான் பெங்களூரில் இருக்கும். ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்துகிறது.
இதுகுறித்து நம்ம கர்நாடகா வெதர் எனும் எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தற்போது பெங்களூரில் உள்ள வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம். இதை பார்க்கும் போது முன்கூட்டியே கோடை காலம் தொடங்கி விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
எனினும் இரவு நேரங்களில் வெப்பநிமலை 16 டிகிரியாக இருப்பதால் குளிர் நிலவுகிறது. இந்த வெப்பநிலை இயல்பை விட 1.4 டிகிரி குறைவு ஆகும். இது போன்று சீசனே இல்லாமல் பெங்களூரில் வெப்பம் ஏற்படுவதற்கு உலகம் வெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அது போல் தற்போது நிலவி வரும் லா நினோ விளைவால் தென்கிழக்கு மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் கனமழையை கொண்டு வந்துள்ளது. இதனால் கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் தீபகற்ப இந்தியாவில் அடுத்த 5 முதல் 6 வாரங்களுக்கு வெப்பம் இருக்கும்.
மிதமானது முதல் லேசானது வரையிலான கிழக்கத்திய மற்றும் தென் கிழக்கத்திய காற்றால் கர்நாடகா முழுக்க வறண்ட வானிலையே தொடரும். பெங்களூரின் புறநகர் பகுதிகளில் பனி மூட்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
காலை நேரங்களில் பெங்களூரில் தெளிவான மேகம் இருக்கும். இனி வரும் காலங்களில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 16 டிகிரியும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இது போல் வெப்பநிலை அதிகரிப்பதும் இரவு பகலில் மாற்றங்கள் உருவாவதை பார்த்தால் முன்கூட்டியே கோடை தொடங்கும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரில் இன்றைய தினம் 32 டிகிரி சென்டிகிரேட்டாக உள்ளது.
பெங்களூர் போன்ற நகரங்களில் வெயில் காலம் என்றாலும் அதிகம் கொளுத்தாது என்பார்கள். புழுக்கமும் இருக்காதாம். ஆனால் இந்த முறை கோடை தகிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் உலக வெப்பமயமாதலாக இருக்கலாம்.
கடந்த 1990 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 30.9 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 17.6 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பிப்ரவரி மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 33 டிகிரி முதல் 35.5 டிகிரியாகவும் குறைந்தபட்சமாக 13 டிகிரி முதல் 16.5 டிகிரியாகவும் இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 17, 2005 ஆம் ஆண்டு பெங்களூரில் 35.9 டிகிரி வெப்பநிலையால் நகரமே தகித்தது. அதே வேளையில் 1884 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வெப்பநிலை 9.6 டிகிரியாக இருந்ததால் குளிராக இருந்தது.
கோடை எப்போது தொடக்கம்: மகா சிவராத்திரியையொட்டி பெங்களூரில் கோடை தொடங்கலாம் என தெரிகிறது. பெங்களூரில் ஜனவரிக்கு பிறகு பிப்ரவரியில் மழை இல்லை.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications