வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது? தமிழகத்திற்கு குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் தென் பகுதி, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு பலனை கொடுக்கும் தென் மேற்கு பருவமழை நேற்றுடன் விலகிவிட்டது. இந்த நிலையில் அடுத்ததாக வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.

இது தமிழகத்திற்கு மழைப்பொழிவை கொடுக்கும். இந்த சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே தென்மேற்கு பருவமழையால் பெருமளவு மழை தமிழகத்திற்கு கிடைத்துவிட்டாலும் அடுத்த ஆண்டு வரும் கோடையை சமாளிக்க இந்த சீசன் முக்கியமானது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை சீசன் அக்டோபர், நவம்பர் காலங்களில் தொடங்கும். இந்த நிலையில் வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ராஜஸ்தான் பகுதிகளில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை வெளியேறத் தொடங்கியுள்ளது. வழக்கமாக செப்டம்பர் 17ஆம் தேதி ராஜஸ்தான் பகுதியில் வெளியேறும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக வெளியேறத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வரும்அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு தென் மேற்கு பருவமழை வெளியேறும் என தெரிகிறது.
இதன் பிறகு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications