இனிதான் ஆட்டமே இருக்கு.. தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே அதிகரிக்கும் வெயில் - வானிலை மையம்
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியாவின் மேலும் 3 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் கடலோர ஒடிசாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் அணையில் இருந்த நீர் மட்டம் வேகமாக குறைந்தது. எனவே மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், அணையில் உள்ள மீன் வளத்திற்கு தேவையான நீர் கூட விரைவில் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்த அளவில், தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் நீர் இருந்தாலும், சில முக்கியமான நீர் நிலையில் நீர் போதுமான அளவு இல்லை. குறிப்பாக டெல்லா மாவட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இல்லை. இந்நிலையில் வெயில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் இருக்கும் கொஞ்சம் நீரும் விரைவில் வறண்டு விடும் என்று அஞ்சப்படுகிறது.
இதே நிலைமைதான் ஆந்திர, ஒடிசாவிலும் இருக்கிறது. எனவே அடுத்த சில மாதங்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.
அதேபோல ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஓரளவு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications