இனிதான் ஆட்டமே இருக்கு.. தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே அதிகரிக்கும் வெயில் - வானிலை மையம்
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியாவின் மேலும் 3 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் கடலோர ஒடிசாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் அணையில் இருந்த நீர் மட்டம் வேகமாக குறைந்தது. எனவே மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், அணையில் உள்ள மீன் வளத்திற்கு தேவையான நீர் கூட விரைவில் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்த அளவில், தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் நீர் இருந்தாலும், சில முக்கியமான நீர் நிலையில் நீர் போதுமான அளவு இல்லை. குறிப்பாக டெல்லா மாவட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இல்லை. இந்நிலையில் வெயில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் இருக்கும் கொஞ்சம் நீரும் விரைவில் வறண்டு விடும் என்று அஞ்சப்படுகிறது.
இதே நிலைமைதான் ஆந்திர, ஒடிசாவிலும் இருக்கிறது. எனவே அடுத்த சில மாதங்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.
அதேபோல ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஓரளவு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications