மஞ்சள் + ஆரஞ்சு அலர்ட்.. இன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் ரவுண்ட் கட்டும் மழை.. வானிலை மையம்!
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், 14 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ்அதேபோல் நாளைய தினமும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. போதாக்குறைக்கு வெப்பஅலை வேறு மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியது. இதன் தொடர்ச்சியாக தான் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது.

இந்த வெயில் உக்கிரமாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் தான் கோடை மழை வந்து மொத்த தமிழ்நாட்டையும் ஜில்லென மாற்றிவிட்டது. தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தான் இன்று 5 மாவட்டங்களில் மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், 14 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இன்று காலையிலேயே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது. இதனால் நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் நாளைய தினம் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டால் அந்த மாவட்டங்களில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையில் ஆரஞ்ச் அலர்ட் என்றால் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications