Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்சள் + ஆரஞ்சு அலர்ட்.. இன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் ரவுண்ட் கட்டும் மழை.. வானிலை மையம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், 14 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ்அதேபோல் நாளைய தினமும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. போதாக்குறைக்கு வெப்பஅலை வேறு மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியது. இதன் தொடர்ச்சியாக தான் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது.

In Tamil Nadu 19 districts gets yellow and orange alerts for rain

இந்த வெயில் உக்கிரமாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் தான் கோடை மழை வந்து மொத்த தமிழ்நாட்டையும் ஜில்லென மாற்றிவிட்டது. தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தான் இன்று 5 மாவட்டங்களில் மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், 14 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் இன்று காலையிலேயே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது. இதனால் நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் நாளைய தினம் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டால் அந்த மாவட்டங்களில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையில் ஆரஞ்ச் அலர்ட் என்றால் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+