வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் கத்தார் நாடு பரிந்துரைத்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. ஆரம்பமே அசத்தல் என்பதை போல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து தமிழகத்தில் பரவலாக மழையை கொடுத்தது.

weather rain

இந்த ஆண்டு லாலினோ ஆண்டு என்பதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை தமிழகத்திற்கு கிடைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் அக்டோபர் 21 வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்தம் வங்கக் கடலில் உருவாகும் என சொல்லப்பட்டது. அந்த வகையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது.

இது தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என மாறி, நாளை மறுநாள் புயலாக மாறும். இந்த புயலுக்கு டானா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு பகுதியை நோக்கி ஒடிஸா, மேற்கு வங்கத்திற்கு நகரும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாக போகும் முதல் புயல் இதுதான். இந்த புயலானது தமிழகத்திற்கானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+