Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரண்ட மேகங்கள்.. சென்னை டூ தூத்துக்குடி வெளுக்கப்போகும் மழை..மயிலாடுதுறைக்கு வார்னிங் - வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னை முதல் தூத்துக்குடி வரை எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதோடு மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது பல இடங்களில் மழை பெய்தது.

weather rain

நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தென்காசி மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் இன்றும் , நாளையும் பல மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தான் இன்றைய மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று அதிகாலையில் தனது எக்ஸ் பக்கத்தில் 2 பதிவுகளை செய்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு அவர் வெளியிட்ட பதிவில், ‛‛தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மிகமிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை முதல் வேலூர், வேலூர் முதல் டெல்டா, டெல்டா முதல் தூத்துக்குடி மண்டலங்களின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.சென்னையில் இன்று மதியம்/ மாலை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை பெல்ட்டில் மிக கனமழை பெய்துள்ளது. இந்த மாவட்டத்தில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவாரூர், நாகை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. பொங்கலுக்கு முன்பு கடந்த வாரம் பெய்த மழையை விட இந்த மழை அதிகமாக உள்ளது. விவசாயிகள் அறுவடை பணிகளை கவனித்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதேபோல் தென்தமிழகமும் மழை பெய்யும் இடங்களில் பட்டியலில் விரைவில் இணையும். வழக்கம்போல் மாஞ்சாலை பகுதி கவனத்தில் கொள்ளப்படும். பெங்களூரிலும் இன்று ஓரளவு மழை பெய்யும்'' என்று கூறியுள்ளார்.

அதேபோல் அதிகாலை 3.38 மணிக்கு அவர் இன்னொரு பதிவை செய்துள்ளார். அதில், ‛‛காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு நோக்கி மிகவும் சூப்பரான மழை மேகங்கள் நகர்ந்து வருகிறது. இது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழையை அளிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+