சென்னையில் பிசுபிசுக்கும் மழை! பள்ளிகளுக்கு விடுமுறையா! அண்டை மாவட்டங்களில் என்ன நிலை?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தற்போது அக்டோபர் 20-ம் தேதிக்கு மேல் தொடங்கியது. இது தொடங்கியதும் வங்கக் கடலில் உருவான ஒரு காற்றழுத்தம் மிதிலி புயலாக மாறி ஒடிஸா அருகே கரையை கடந்தது.

தற்போது வரை எந்த காற்றழுத்தமும் உருவாகவில்லை. இந்த மாத கடைசியில் ஒரு காற்றழுத்தம் உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று பிற்பகல் முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழலே நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில்தான் நேற்று 2ஆவது நாளாக விடிய விடிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னையில் கிண்டி, தி.நகர், வேப்பேரி, கோயம்பேடு, அமைந்தகரை, மயிலாப்பூர், சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னையில் நேற்று முன் தினம் காலை 8.30 மணி முதல் காலை வரை 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக எண்ணூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அது போல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவித்துள்ளனர். அது போல் புதுவை, காரைக்காலிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் ஏமாற்றமடைந்தனர். அதே வேளையில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், நீலகிரி, தேனி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனியில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இன்று (23-11-2023) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications