அடுத்த 2 மணி நேரம்.. குடை அவசியம்.. சென்னை டூ குமரி வரை.. 14 மாவட்டங்களுக்கு ”ஆரஞ்சு அலர்ட்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு பிறகு மழை கொட்டி வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Weather Rain Chennai

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது " இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+